Friday, October 19, 2007

புற்று நோய் முன்னறிதல் முறை - புதிய கண்டுபிடிப்பு - ஒரு வரப்பிரசாதம்

அக்டோபர் மாதம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய், அது எந்த உறுப்பைப் பாதித்தாலும் அதனால் ஏற்படும், மன உளைச்சலும், பயமும் தவிர்க்க முடியாதது. புற்று நோய் சிகிச்சையில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்ததாலும், இன்னும் அதைப் பற்றி அந்த அளவு விழிப்புணர்ச்சி  நம் மக்களுக்கு  ஏற்படவில்லை.

புற்றுநோய் பெரும்பாலும் சற்று வளர்ந்த நிலையிலேயே கண்டு பிடிக்கப்படுகிறது. விவரம் தெரியாதவர்களுக்கு, அது ஏதோ ஒரு வலி என்று இருந்து, பின்னர் கண்டறியடுப்படும்போது அது பெரும்பாலும் முற்றிய (malignant) நிலையை அடந்து விடுகிறது.

இந்த நிலையை முற்றிலும் மாற்றியமைக்கக் கூடிய ஒரு புதிய முன்னறிதல் முறை  (http://balablooms.blogspot.com/2007/06/blog-post_8535.html) தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டுபிடித்தவர் முனைவர் திரு. மாசிலாமணி அவர்களும் அவர் குழுவும். இவர் சௌதி அரேபியா, ரியாத்தில் கிங் ஃபைசல் பல்கலைக் கழகத்தில் கதிரியக்கத் துறையில்  பேராசிரியராக பணி புரிகிறார்.

இந்த முறையில் ஒருவருக்கு புற்றுநோய் வரக்கூடிய அறிகுறிகள் இருக்கிறதா, இல்லையா என்பது ஒரு சிறு சோதனை மூலம் அறியலாம். அதாவது,  சிறுநீர், இரத்த மாதிரிகளை பரிசோதனைகள் செய்து அரை மணி நேரத்திலேயே இந்த சோதனைகளின் முடிவுகளை அறியலாம்.

இந்த சோதனைகளை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்து, புற்றுநோய் பற்றிய சாத்தியக்கூறுகளை முன்னறியலாம். மம்மோக்ராம், மற்றும் செலவு , வலிகள் மிகுந்த சோதனைகள்  தேவையில்லை.

இந்த கண்டுபிடிப்பு இந்திய மருத்துவக் கழகத்தினால் தேர்ந்த குழுக்களின் மூலம்  சோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னறி முறை, புற்றுநோய் மருத்துவத்தில் ஒரு மைல்கல் ஆகும். குறிப்பாக, வம்சாவளி புற்றுநோய் சாத்தியக் கூறுகள் உள்ளவர்களுக்கு இது நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாகும்.

என் அனுபத்தில் Passive smoking கினால் ஏற்பட்ட ஒரு நிகழ்வை, ஒரு சிறு கதையாக முன்பு பதிவேற்றியுள்ளேன். அதன்  மீள் பதிவு கீழே:

------------------------------------------------------------------------------------------------------

உன் சுகம் - என் சுமை

சுரேஷின் புருவம் விரிந்து, நெற்றி சுருங்கியது. தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தவன், wash basin ல் சளியை உமிழ்ந்த போது, அதில் தென்பட்ட சிறிய துளி இரத்தத்தைப் பார்த்ததும் மனம் சற்று துடுக்குற்றான். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவ்வாறுதான் இருந்து வருகிறது. முதலில் அவன் இது தற்செயலாகத்தான் இருக்கும் , இருமலால் தொண்டை ரணமானதால் இந்த இரத்த கசிவு ஏற்படுகிறது போலும் என எண்ணினான். ஆனால் அது தொடரவும், முன்பு கடுகு அளவு தெரிந்த கசிவு, இப்போது ஒரு குங்குமப் பொட்டு அளவு வர ஆரம்பித்ததும் அவனுக்கு ஒரு இனம் புரியாத கலக்கம் ஏற்பட்டது.

வாயை துடைத்துக்கொண்டு சற்று நிதானமாக நடந்து போய் ஊஞ்சலில் சென்று கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்தான்.

"என்னங்க.... ஏன் சோர்வா இருக்கீங்க? உடம்பு முடியலியா? ..........நீங்களும் இந்த சளி, இருமலாலே ரொம்பத்தான் கஷ்டப்படறீங்க. ...........வேணும்னா கஷாயம் போட்டு தரட்டுமா?.." என அக்கறையோட விசாரித்துகொண்டே அவன் மனைவி வந்தாள்.

சுரேஷின் நிலை பார்த்து மேலும் "....டாக்டர போய் பாருங்கன்னா போக மாட்டேங்கறீங்க. .........ஏன் இன்னிக்கு லீவுதானே...வாங்க டாக்டர்கிட்டே போலாம்..."

"ம்ம்ம்ம்ம்........................சாயங்காலம் போலாம்.." எனக்கூறி அப்படியே சாய்ந்து படுத்தான்.

"சுரேஷ் உங்களுக்கு இந்த இருமல் எத்தனை நாளா இருக்கு? " அவனை பரிசோதித்த டாக்டர் கேட்டார்.

"இருமல் ஒரு 15 நாளா இருக்கு. ஆனா எனக்கு அடிக்கடி சளி பிடிக்கும் அப்படியே இருமலும் வரும். இது ஒன்னு, ஒன்னரை வருஷமா இருக்கு டாக்டர்...."

"...மூச்சு விடும் போது சாதாரணமாய் இருக்கா? இல்லே ஏதாவது சிரமப் படறீங்களா?.."

"....சமயததுலே ஏதோ மூச்சு அடைக்கற மாதிரி இருக்கும். அப்போ கொஞ்சம் மூச்சை இழுத்து வாங்குவேன்.. சரி, இது நெஞ்சுலே இருக்கிறே சளியாலே இருக்குன்னுட்டு விட்றுவேன்.."

"சரி, இந்த medicines எடுத்துக்கோங்க....அப்படியே உள்ளே லேப்லெ போய் sputum sample ம் blood sample ம் கொடுத்துட்டு போங்க. அடுத்த வாரம் வந்து பாருங்க.." என விடை கொடுத்த டாக்டரிடம் "...is there any problem?.." என சற்று கலக்கத்துடன் கேட்டான்.

"No..No.. it is just a routine test. No worry please!!!!......"

சாப்பிட்ட மருந்துகள் சற்று இதம் தந்தாலும், இருமல், சளி தொல்லை தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆயினும் வேலைப்பளு காரணாமாய் அதைப் பற்றி வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் அந்த வாரம் கழிந்தது. மீண்டும் டாக்டரை பார்க்க சென்றான்.

குசலங்கள் விசாரித்து, மீண்டும் தொண்டை, மார்பு பரிசோதனைகளுக்குப் பிறகு "....sputum and blood examination result வந்துருக்கு. எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு. நான் ஒரு டாக்டர் அட்ரஸ் தரேன். நீங்க அவரைப் போய் பாருங்க. அவர் சில டெஸ்ட் எல்லாம் பண்ணுவார். அதுக்கப்பறம் நாம ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்...."

தூக்கி வாரிப் போட்டது சுரேஷிற்கு. "டாக்டர்.. என்ன சொல்றீங்க... Do you mean something serious?..." தொண்டை அடைத்து குரல் கம்மியது.

"No.. No.. நான் இப்போ எந்த முடிவுக்கும் வரலே.. உங்க sputum பரிசோதனை பண்ணினதிலே எனக்கு சில சந்தேகம் இருக்கு. அதுக்காகத்தான் நான் உங்களை அந்த cancer specialist போய் பார்க்க சொன்னேன். அது மட்டுமில்லாமெ சில pathological test எல்லாம் செய்யனும். அதுக்கு பிறகுதான் ஒரு முடிவுக்கு வர முடியும். ஆன நீங்க ஒன்னும் பயப்பட வேண்டாம். Alarming ஆ ஒன்னும் இல்லே. It is just a precaution...."

வாயடைத்துப் போய் இருந்தாள் சுரேஷின் மனைவி. அவளுக்கு டாக்டர் கூறியது முழுவதும் புரியவில்லை என்றாலும், கணவனின் முகப்போக்கும், டாக்டர் சாந்தப்படுத்தும் விதமாய் கூறிய பதிலும் ஏதோ சீரியஸ் என மட்டும் புரிந்தது. ".. டாக்டர்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவருக்கு வெறும் சளி, இருமல். இதற்கு போய் எதற்கு cancer specialist, டெஸ்ட் எல்லாம்.." என படபடத்தாள்.

"..அது இல்லம்மா.. டாக்டருக்கு கொஞ்சம் சந்தேகம். அதனாலேதான் இதெல்லாம்.." மனைவியை மேலும் வேற எந்த கற்பனையும் செய்ய விடாமல், அதே நேரம் இந்த பேச்சைத் தொடர விடாமலும் செய்து.." டாக்டர், நான் உங்களுக்கு அப்புறம் போன் செய்றேன்.." என வெளி நடந்தான்..

அவனுக்கே உள்ளூர பயம்தான். அவனும் டாக்டரை அந்த சமயம் தவிர்க்கத்தான் விரும்பினான். Cancer என்கிற விஷயம் பற்றிய விவாதம் மேலும் தொடர அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் அவன் மனைவி அவனை விடவில்லை. வீடு வரும் வரையிலும் திரும்ப திரும்ப டாக்டர் ஏன் அப்படி சொன்னார்? அவனுக்கு என்ன சரியில்லை? ஏன் வெரும் சளி, இருமலுக்கு இவ்வளவு test, இவருக்கு என்ன தெரியும், வேற ஒரு டாக்டரை போய் பார்க்கலாமா? என்று தொணதொணவென்று பிடுங்கி எடுத்து விட்டாள். வீடு திரும்பியதும் சுரேஷ் அவளை சமாதானப்படுத்தி, அவளிடம் தனக்கு இருமல் சளியோடு இரத்தம் வருவது பற்றியும், உள்ளூர இருக்கும் பயம் பற்றியும் கூறி, cancer specialist ஐ சந்திப்பதுதான் சரி என்றும் விளக்கினான்.

இருவருக்குமே பயம் நெஞ்சை கவ்வியது. உலகமே இருண்டுவிட்டது போல் இருந்தது. டாக்டர் கூறியது போல் எதுவுமே இருக்காது என நம்பத்தான் நினைத்தார்கள். ஆயினும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர முடியவில்லை.

"....நான் முன்னாடி செய்த sputum and blood examination report பார்த்தேன். உங்க டாக்டரோட ரிப்போர்ட்டையும் பார்த்தேன். ஒரு MRI scan ம், PET scan ம் எடுக்கனும். நீங்க நாளைக்கு வரமுடியுமா? Lung Specialist வருவார். ஒரு bronchoscopy எடுக்கனும். இதிலெ கொஞ்சம் வலியிருக்கும். அனெஸ்திசியா கொடுத்துதான் எடுப்போம். நாளைக்கு ஒரு நாள் நீங்க இங்கேயே அட்மிட் ஆகனும்.." என படபடவென்று அவனுக்கு பேச இடம் கொடுக்காமல் முடித்தார்.

"அதுக்கு முன்னாடி, நீங்க என்னோட சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க. நீங்க புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா?.."

"இல்ல டாக்டர். காபி, டீ கூட ரொம்ப குடிக்க மாட்டேன்.."

"What are you Mr Suresh? ..உங்க work environment பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...."

"நான் ஒரு software company யிலே senior executive ஆ இருக்கேன். வேலைப்பளு இருக்கும். Office யெல்லாம் நல்ல சௌகரியமா இருக்கும். தனி அறை, ஏசி எல்லாம்.. ஆமா டாக்டர், do you suspect the impact of passive smoking?...something like lung cancer?" என்று பட்டென்று தன் மனதில் இத்தனை நாள் உறுத்திக்கொண்டிருந்ததையும், அவ்ர் தன்னிடம் எதிர்பார்த்ததையும் தூக்கிப் போட்டான்.

'Exactly....'

"நானும் அதைத்தான் நினைத்து பயந்தேன் டாக்டர். அலுவலகத்தில் புகை பிடிக்கிறவர்கள் அதிகம். வேலையில் சேர்ந்த இரண்டு, மூன்று வருஷத்திலே புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட ஆரம்பித்து விடுகிறார்கள், வேலை அழுத்தம் காரணமாய். எனவே எங்கே போனாலும் ஒரே புகை தான், கேண்டினிலும் கூட. நான் அதிகம் meetings attend செய்யனும். அங்கேயும், இதே கதைதான். அதுவும் சிறிய ரூமாயிருப்பதால், ஒரே புகை மூட்டமாயிருக்கும். இதே நிலைதான் நான் முன்பு வேலைபார்த்த அலுவலகங்களிலும். ...............என் பதவியின் மூலமாக, நான் எவ்வளவோ முயற்சி செய்தும், அலுவலகத்தில் anti-smoking policy in work area கொண்டு வர முடியவில்லை. அரசாங்கமே திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சியைத் தடுக்க எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது? இந்த சிகரெட் தயாரிப்பவர்களின் லாபி அவ்வளவு எளிதில் இதை விட்டு விடுவார்களா? அமெரிக்கா,கனடா போன்ற மேலை நாடுகளில் இதற்கான சட்ட திட்டங்கள் உள்ளன. வளர்ந்து வரும் நாடுகளில் தான் இது போன்ற பிரச்சினைகள். இதை ஒரு occupational hazard ஆகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் வாங்கும் சம்பளத்தின் ஒரு பகுதி இதற்கும் சேர்த்துதான் என்று எண்ணிக்கொள்கிறேன். ஆனால் அது இவ்வளவு தூரத்திற்கு கொண்டு விடும் என்று எதிர் பார்க்கவில்லை....." தன் மனதில் இருந்த ஆதங்கம், ஏமாற்றம், கோபம், கையாலாகத்தனம ஆகிய அனைத்தையும் ஒரேமூச்சில் கொட்டித் தீர்த்தான்.

"....Relax.. relax Mr சுரேஷ்.. கவலைப்படாதீர்கள். Let us wait for the results of the tests...."

ஒரு வாரம் கழித்து.......

"Congratulations...Mr. சுரேஷ். ரிப்போர்ட்ஸ் எல்லாம் வந்தாச்சு. the symptoms are benign (In a general sense, "benign" means of a mild character that does not threaten health or life.). நீங்க ஒன்னும் பயப்படவேண்டியதில்லை. வெறும் medicine மூலமாகவே சரி பண்ணி விடலாம். நல்ல வேளை நீங்கள் சரியான நேரத்தில் வந்து இருக்கிறீர்கள். இல்லையென்றால் இது வளர்ந்து நுரையீரல் புற்று நோயில் கொண்டு போய் விட்டிருக்கும். Thank God!!!....."

-----------------------------------------------------------------------------------------------------------------

பின் குறிப்பு :

  1. Passive smoking போன்ற மோசமான இலவசம் உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்பது என் கருத்து.
  2. Passive Smoking அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று கூறுவதற்கில்லை. ஆனால் புகையே பிடிக்காதவர்களிடத்தில, passive smoking க்கிற்கு உட்பட்டவர்களுக்கு சாத்தியக்கூறுகள் 24% அதி்கமாய் இருப்பதாய் ஆய்வுகள் கூறுகின்றன.
  3. நான் இந்த சிறு கதையில் படிப்பவர் மனம் அதிகம் பாதிக்கக்கூடாது என்பதற்காக benign என முடித்துள்ளேன். ஆனால் என் சக ஊழியர் ஒருவருக்கு passive smoking ஆல் Non-small cell lung cancer இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர் தற்போது chemotherapy உட்பட மற்ற சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
  4. என் தந்தைக்கு ஒரு சமயம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவர், நுரையீரலில் புகையினால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறினார். என் தந்தை இரயில்வேயில் அப்போது cabin station master ஆக வேலை பார்த்து வந்தார். அது சரக்கு இரயில் shunting yard அருகில் இருந்தது. அப்போது நீராவி இஞ்சின் மட்டுமே. அதன் புகையே என் தந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
  5. இதில் குறிப்பிட்டிருக்கும் மருத்துவ முறைகள் கதைக்காக எழுதப் பட்டது. உண்மைப் பிரயோகம் மருத்துவர்கள் மட்டுமே கூற முடியும்.
  6. சற்றே அதிகமான ஆங்கில வார்த்தைப் பிரயோகத்திற்கு மன்னிக்கவும். கதையின் ஓட்டத்திற்காக அதைத் தவிர்க்க முடியவில்லை.

6 comments:

Thamiz Priyan said...

மார்பக புற்றுநோய் குறித்து மக்களிடையே விழிப்பிணர்வு இல்லாதது வருந்தத் தக்க விஷயம். 14 ந் தேதி துபாயில் ஒரு ரேடியோ சானல் மூலம் இதைப் பற்றி ஒரு ஒலிபரப்பு நிகழ்த்தப்பட்டது. அதைக் கேட்ட ஒருவர் தனக்கும் அதே போன்ற அடையாளங்கள் இருப்பதைக் கண்டு மருத்துவரை அணுகினார். அப்போது அவருக்கு முத்திய நிலையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
http://www.gulfnews.com/nation/Health/10161315.html

கோவி.கண்ணன் said...

நல்ல விழிப்புணர்வு கருத்துக்களை தந்திருக்கிறீர்கள் !

பாராட்டுக்கள் !

உண்மைத்தமிழன் said...

உண்மையாகவே அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் பாலா ஸார்..

புகை பிடித்தலை ஹாபிக்கும், ஸ்டைலுக்கும், பொழுது போவதற்கும் பயன்படுத்தும் வலைப்பதிவு சிங்கங்கள் இதை படித்து உணர்ந்து கொள்வது அவர்களுக்கும், அருகில் நின்று Passive Smoking செய்யும் என்னைப் போன்ற அப்பாவிகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்..

Bala said...

டெல்ஃபைன்
உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி. நான் உங்கள் கருத்துக்களுடன் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன்.

//"நானும் அதைத்தான் நினைத்து பயந்தேன் டாக்டர். அலுவலகத்தில் புகை பிடிக்கிறவர்கள் அதிகம். வேலையில் சேர்ந்த இரண்டு, மூன்று வருஷத்திலே புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட ஆரம்பித்து விடுகிறார்கள், வேலை அழுத்தம் காரணமாய். எனவே எங்கே போனாலும் ஒரே புகை தான், கேண்டினிலும் கூட. நான் அதிகம் meetings attend செய்யனும். அங்கேயும், இதே கதைதான். அதுவும் சிறிய ரூமாயிருப்பதால், ஒரே புகை மூட்டமாயிருக்கும். இதே நிலைதான் நான் முன்பு வேலைபார்த்த அலுவலகங்களிலும். ...............என் பதவியின் மூலமாக, நான் எவ்வளவோ முயற்சி செய்தும், அலுவலகத்தில் anti-smoking policy in work area கொண்டு வர முடியவில்லை. அரசாங்கமே திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சியைத் தடுக்க எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது? இந்த சிகரெட் தயாரிப்பவர்களின் லாபி அவ்வளவு எளிதில் இதை விட்டு விடுவார்களா? அமெரிக்கா,கனடா போன்ற மேலை நாடுகளில் இதற்கான சட்ட திட்டங்கள் உள்ளன. வளர்ந்து வரும் நாடுகளில் தான் இது போன்ற பிரச்சினைகள். இதை ஒரு occupational hazard ஆகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் வாங்கும் சம்பளத்தின் ஒரு பகுதி இதற்கும் சேர்த்துதான் என்று எண்ணிக்கொள்கிறேன். ஆனால் அது இவ்வளவு தூரத்திற்கு கொண்டு விடும் என்று எதிர் பார்க்கவில்லை....." தன் மனதில் இருந்த ஆதங்கம், ஏமாற்றம், கோபம், கையாலாகத்தனம ஆகிய அனைத்தையும் ஒரேமூச்சில் கொட்டித் தீர்த்தான்.//

இந்த பத்திதான் என் போன்றவர்களின் நிலைமை. வாழ்க்கையில் புகையே பிடிக்காத என் சக ஊழியர், 9 மாத சிகிச்சைக்குப் பிறகு தற்போதுதான் மீண்டும் வேளையில் சேர்ந்துள்ளார். அந்த நிலமை மற்றவர்களுக்கும் வரக்கூடாது என்கின்ற ஏக்கம்தான், இந்தக் கதை.

//Though Lung cancer has been known to be caused by smoking, other causes are like radiation, asbestosis, occupational hazards like people working in cotton fiber companies, coir and coir products etc.//

புகைப் பிடித்தல் தவிர்க்கப் படக் கூடிய/வேண்டிய ஒரு உத்தியோக சங்கடம். இதன் வெற்றி, நிர்வாகத்தின் கையில் மட்டுமே இருக்கிறது.

உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் நன்றி.

cheena (சீனா) said...

சாதாரண இருமல் தொடர்ந்து இருந்தாலே புற்று நோயோ என ஐயப்பாடு வர வேண்டும் என்பது இப்பதிவின் நோக்கம். எந்த இயல்பான நிலையும் மாறும் போது மருத்துவரை அணுக வேண்டும்.

நன்று பாலா - நன்றி பாலா

மார்பகப் புற்று நோயால் துன்பப்படும் ஒரு சகோதரியின் சோகக் கதையைப் பாருங்களேன்.

http://anuratha.blogspot.com

Anonymous said...

Hi,
This is a serious comment. In the
West, they have found out that
dogs can be trained to find out if a person has certain type of cancer.