Friday, October 05, 2007

மண் குதிரையை நம்பி.....

தமிழில் ஒரு பழமொழி உண்டு. "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" என்று. ஆனாலும் இது உண்மையல்ல, "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே சரி.  மண் குதிர் என்பது ஆற்றின் நடுவே இருக்கும் சிறு, சிறு மணல் திட்டுக்களையே குறிக்கும்.

இந்த மண் குதிர் என்பது ராமர் பாலம் என்கிற, ஆதாம் பாலத்திற்கும் பொருந்தும். ஏனென்றால், அந்தப் "பாலமு"ம் பல மணல் திட்டுக்(குதிர்)களை கொண்ட ஒரு தொடரில்லா பாலம்தான்.

இன்று இந்த மணல் திட்டுக்களை நம்பித்தான் எல்லோரும் அரங்கத்தில் இறங்கியுள்ளார்கள். ஆதரவாளர்களும் சரி, எதிர்ப்பாளர்களும் சரி. 

இந்த மண் குதிர்கள் யார் காலை வாங்கி, கபளீகரம் பண்ணப்போகின்றனவோ?

1 comment:

வெற்றி said...

சுவாரசியமான பதிவு. நன்றி.