Monday, January 29, 2007

Microfranchising (நுண் வியாபார உரிமை) - பாகம் 2

Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 1 ஐ படிக்க

Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 2

முதல் பாகத்தில் கூறியிருந்தபடி, நுண் வியாபார உரிமை பல்வேறு முறைகளில், பல துறைகளில் செழிக்க வாய்ப்புள்ளது. உள்ளூர் தேவைகள், மக்களின் பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் அறிந்த ஒரு உள்ளூர் தொழில் முனைவர், ஒரு சக்தி வாய்ந்த, பெரிய தேசிய/ பன்னாட்டு அளவில் வர்த்தகம் செய்யும் ஒரு குழுமத்துடன் தொடர்பு கொள்ளும் போது “win-win” நிலைமை சாத்தியமாகிறது. இந்தப்பெரு நிறுவனம் “கை கொடுக்கும் கை” யாக விளங்குகிறது. நுண் வியாபார உரிமையை தனி மனிதர் மட்டுமன்றி, குழுக்களாகவும் சேர்ந்து செயல் படுத்தலாம். சுய உதவிக் குழுக்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நுண் வியாபார உரிமையை வர்த்தக ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் பயன்படுத்தலாம். வர்த்தக ரீதியாக பயன்படுத்தும்போது அது தனி மனிதருக்கோ அல்லது அந்த குழுவிற்கோ ஆதாயம் ஈட்டும் பணியாக முடிகிறது. சமுதாய ரீதியாக பயன்படுத்தும்போது, அது அந்த சமுதாயத்திற்கு பயன்படும் வகையில், ஆதாயமின்றி பொதுநலத்தோடு செயல் படுத்தப்படுகிறது. மருந்து தயாரிப்பாளர்கள் நடத்தும் உடல் நல பரிசோதனை முகாம்கள், கண் பரிசோதனை முகாம்கள், விவசாய பொருட்கள் தயாரிப்பாளர்கள் நடத்தும் ஆய்வுகள், விழிப்புணர்ச்சி கூட்டங்கள் ஆகியவை சமுதாய ரீதியானவை ஆகும். Scojo என்கிற ஒரு கண்பார்வை சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம், தென் அமெரிக்காவில், கிராமங்களில் $2 க்கு படிக்கும் கண்ணாடியை முனைவர்கள் மூலம் விற்று ஆதாயமும் கண்டது. இது சமுதாய சேவையும், அதே சமயம் தொழில் வெற்றியும் ஆகும்.

இந்தியாவில் நுண் வியாபார உரிமைக்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன், அவற்றில் தலை சிறந்ததும் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டதும், குஜராத், ஆனந்த் நகரத்தில் உள்ள அமுல் பால் பண்ணையே ஆகும். சிறு கிராமங்களில் உள்ள ஆடவர்க்கும், பெண்டிர்க்கும் கறவை மாடுகள் வாங்கி கொடுத்து, அதை சேகரித்து ஒரு வெள்ளைப் புரட்சியை செய்து அந்த மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திய அதற்கு ஈடு உண்டோ? இதைத்தவிர மற்ற உதாரணங்கள்:
  • ICICI வங்கி 30க்கும் மேற்பட்ட நுண் வியாபார உரிமை நிறுவனங்கள் மூலமாக 10 லட்சத்திற்கும் மேலான குடும்பங்களுக்கு கடன்உதவி அளித்து வருகிறது.
  • Aptech மற்றும் NIIT நிறுவனங்கள் நடத்தும் கணிணி கல்விக்கூடங்கள்
  • ஜனனி என்றொரு நிறுவனம் மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடத்தும் சிகிச்சை மையங்கள் ( 260 மையங்கள்) http://www.janani.org/home.htm
  • n-Logue நடத்தும் இணைய மையங்கள் http://www.n-logue.com
  • Drishte நடத்தும் இணைய மையங்கள். இவை மின் ஆளுமையை கிராமங்களூக்கு எடுத்துச் சென்றன.
  • OneRoof நடத்தும் சேவை மையங்கள். இவை தமிழ்நாட்டில், திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் 9 விதமான சேவைகளை (தகவல், தொலை தொடர்பு, நிதி, கல்வி, எரிசக்தி, ஆரோக்கியம், நீர், சுகாதாரம், உபகரணங்கள் மற்றும் ஆலோசனை மையம்) அளித்து வருகிறது. http://www.oneroof.com/india.html
  • DTDC (Desk to Desk Couriers), BlazeFlash தபால் பட்டுவாடா
  • Arvind Mills ன் ruff ‘n’ tuff jeans. 4000 தையல்காரர்களை நேரடியாக தொடர்பு கொண்டு தனது பிரசித்தி பெற்ற ஜீன்ஸ் ஆடையை தைத்து வழங்குகிறது.
  • Lijjat papads மஹாராஷ்ட்ராவில் குடும்பப் பெண்மனிகளைக் கொண்டு சிறிய அளவில் ஆரம்பித்து இன்று பரந்து விரிந்திருக்கும் ஒரு ஸ்தாபனம்.
  • HP - HP village Photographers மூலமாக டிஜிட்டல் போட்டொகிராபி- 3 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட மையங்கள்.
  • Ferns ‘n’ petals பூச்செண்டு வியாபாரம், 32 மையங்கள்.
  • Nirma ஏற்படுத்திய தாக்கத்தை நாம் மறந்திருப்போமா? குடிசைத் தொழிலாக ஆரம்பித்து தேசிய அளவில் வியாபித்த ஒரு ஸ்தாபனம்.
மேற்குறிப்பிட்ட எதிலும் அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பண்டைய காலங்களில், மத குருமார்களே நாட்டை ஆண்டார்கள். பின்னர் அரசாட்சியும், ஜனநாயகமும் வந்தது. அப்பொழுது அரசு வியாபார சந்தையை ஏற்படுத்தி, சீற்படுத்தியது. இப்பொழுது நடப்பது வணிக சந்தை. இதில் வணிக நிறுவனங்களே சந்தையை நிர்ணயிக்கின்றன.

உலகமயமாகுதலும் (globalization) இதற்கு ஒரு காரணம். உலகமயமாதல் காரணமாக பண்ணாட்டு நிறுவனங்களும் இந்திய வணிக சந்தையில் நுழைகின்றன. C K பிரகலாத் (Coimbatore Krishnarao Prahalad, the Paul and Ruth McCracken Distinguished University Professor of Corporate Strategy at the University of Michigan Ross School of Business, is a globally recognized business consultant whose client list includes AT&T, Cargill, Citicorp, Oracle, TRW and Unilever. Recently Professor C. K. Prahalad earned the third spot on Suntop Media's 2005 "Thinkers 50" list, just behind Harvard strategy specialist, Michael Porter, and Microsoft founder, Bill Gates. - WIKIPEDIA) பண்ணாட்டு நிறுவனங்கள் வறூமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களை ஒதுக்க முடியாது என்று ஆணித்தரமாக கூறுகிறார். எனவே பண்ணாட்டு நிறுவனங்கள் நுண் வியாபார உரிமை போன்ற வியாபார நுணுக்கங்களை நிச்சயம் பயன்படுத்தும். ஏனென்றால் அதில் அவர்களுக்கு நிறைய அணுகூலங்கள் உள்ளன.


எதிர் வரும் காலங்களில் சாத்தியக்கூறுகள் எவ்வாறு இருக்கும் என அடுத்த பகுதியில பார்ப்போம்.
(தொடரும்)

Microfranchising (நுண் வியாபார உரிமை) – பாகம் 1 ஐ படிக்க

Microfranchising (நுண் வியாபார உரிமை) - பாகம் 1

Microfranchising (நுண் வியாபார உரிமை)

Microfranchising இதன் தமிழாக்கம் என்ன? எனக்குத் தெரியவில்லை. இந்த கட்டுரையைப் பொருத்த வரையில், நான் இதை “நுண் வியாபார உரிமை” என்றே குறிப்பிடப் போகிறேன்.

நுண் வியாபார உரிமை, நுண்கடனைச் (MicroCredit) சார்ந்தது மட்டுமல்லாமல், நுண்கடனின் அடுத்த தலைமுறை என்றும் கூறப்படுகிறது. பொருளாதார வல்லுனர்களால், மிக முக்கியமாக, வளர்ந்து வரும் நாடுகளில், இதன் அத்தியாவசத்தன்மை பெரிதும் உறுதிப்படுத்திப் பேசப்படுகிறது. இது வறுமையை ஒழிக்கும் முறைகளில் மிகப்பெரிய ஒரு முறையாகவும் எடுத்து வைக்கப்படுகிறது. வருவாய் பெருக்கும் முறையாக மட்டுமல்லாமல், சுய வேலைப்பாடு, மற்றும் நண்பர்கள்/சார்ந்தோர் (neighbourhood) வேலைப்பாடு, சொத்து உருவாக்குதல், சமுதாய வளர்ச்சி ஆகியவற்றோடு ஒருங்கிணைந்து ஒரு பொருளாதார மாற்றத்தை உருவாக்கும் ஒரு சித்தாந்தமே நுண் வியாபார உரிமை. பங்களாதேசத்தை சேர்ந்த, கடந்த வருடம் நோபெல் பரிசு பெற்ற மொஹம்மது யுனுஸ், நுண்கடண் சித்தாந்தத்தை மிகப்பெரிய அளவில் உபயோகப்படுத்தி வெற்றி பெற்றார். அதன் மூலமாக இணைக்கப்பட்ட (networked) நிருவனங்களையும் உருவாக்கினார்.

நுண் வியாபார உரிமை என்றால் என்ன? இதில் பல்வகைபட்ட உரிமைகள் உள்ளன. இது ஏதோ புது வகையான தொழில் முறையோ என்று மூளையை கசக்கிக் கொள்ளவேண்டாம். ஒரு சில வடிவங்களில், இந்தியாவில் இது ஏற்கனவே உபயோகத்தில் உள்ளதுதான். உதாரணமாக, இன்சுரன்ஸ் ஏஜென்சி ஒரு நுண் வியாபார உரிமை தான். அதாவது ஒரு பெருமையுடைய (known brand) நிறுவனம், தன் வியாபார பொருட்களை/ சேவையை, நேரடியாக தனி மனிதரின் மூலம் விற்பது/அளிப்பது தான் நுண் வியாபார உரிமையின் அடிப்படை. இதில் பல்வேறு உத்திகள் கையாளாப்பட்டு வருகின்றன. வாகன வியாபாரங்கள், உணவகங்கள், செய்தித்தாள்/பத்திரிக்கை ஆகியவை பெரும்பாலும் இந்த முறையைத்தான் கடைபிடிக்கின்றன. சில வகையான தொழில்களூக்கு மிக அதிக மூலதனம் வேண்டியிருக்கும். நுண் வியாபார உரிமையில், மத்திய அல்லது அதற்கும் கீழ்ப்பட்ட நிலையிலுள்ள மக்கள் சுயமாக பொருள் ஈட்டுவதற்கு வழி வகுக்கும் உத்திகள் மட்டுமே உள்ளடக்கம். இது ஏதடா “புதிய மொந்தையில் பழைய கள்” என்று முகம் சுளிக்க வேண்டாம். வேண்டுமென்றால் “புதிய சீசாவில், புதிய பதனீர்” என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

வேறு எங்கிலும் மிக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட ஒரு தொழிலை/ வியாபாரத்தை /சேவையை அல்லது தொழில்/வியாபார/சேவை முறையை அதே அடிப்படையில் மற்ற இடங்களிலும் நகல் முறையில் அமல் படுத்தப்படும் போது வெற்றி வாய்ப்பு நிச்சயப்படுத்தப்படுகிறது. அதே சமயம் இதில் முனைப்படுபவர்களுக்கு மிகப் நுண்ணிய தொழில் நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டுமென்றோ அல்லது தொழில் அறிவோ இருக்க வேண்டுமென்றோ அவசியம் இல்லை. நுண் வியாபார உரிமைக்கும், தனி நபர் செய்யும் தொழில் அல்லது வியாபாரத்திற்கும் வேற்றுமைகள் நிறைய உண்டு. நுண் வியாபார உரிமையில் சிறு மூலதனம், விற்பனை நிலையம் அல்லது தொழில் திறன் (skill) மட்டுமே போதும். தேவையான கச்சா பொருட்கள் அல்லது விற்பனை பொருட்கள், வியாபார உத்தி, சந்தை நிலவரம் ஆகியவை தானாகவே வழங்கப்படும். எனினும் எல்லோராலும் தொழில் முனைவர் (entrepreneur) ஆவது என்பது முடியாது. ஆனால் எவரால் முடியுமோ அவர் மற்றவர்க்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும்.

நுண்கடன், நுண் வியாபார உரிமையோடு இணையும்பொழுது, அது சிறு தொழில் முனைவர்களுக்கு, ஒரு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். அது மட்டுமல்லாமல், இந்த மாதிரியான நிறுவனங்கள் ஒரு வறையறுக்கப்பட்ட விதிமுறைகளோடு செயல்படுவதால், அவைகளின் அதிக வளர்ச்சிக்கு அரசாங்க உதவிகளும், வங்கிகளின் நிதியுதவிகளும் மற்றும் பல நன்மைகளும் கிடைக்கும்.

இவைகளின் வளர்ச்சி சிறு நகரங்களிலும், கிராமங்களிலும், பெருநகரங்களை விட அதிகமாக இருக்கும். இதனால், தனி மனித தேவை சம்பந்தபட்ட எல்லா விதமான தொழில்/ சேவைகளிலும் நுண் வியாபார உரிமை சாத்தியப்பட்டதே. உதாரணமாக, அன்றாட அத்தியாவசிய தேவைகள், அழகு சாதன பொருட்கள், குழந்தைகளுக்கான தேவைகள் போன்றவற்றில் ஆரம்பித்து, இணைய மையம், சூரிய எரி சக்தி, நீர் வினியோகம், கணிணிக் கல்வி, தொலைபேசி மற்றும் கைத்தொலைபேசி அட்டை வினியோகம் மற்றும் இணைப்புகள், தபால் வினியோகம் (courier), ஐஸ் கிரீம் மற்றும் பேக்கரி பொருட்கள், சிறு/குறு திண் பண்டங்கள் ஆகிய அனைத்தும் சாத்தியமே.

மொத்தத்தில் நுண் வியாபார உரிமை ஒரு பொதுவுடமையான முதலாளித்துவம் (communistic capitalism) என்று கூறினால், அதில் ஏதேனும் மிகைப்பாடு உண்டா? இல்லை இதை ஒரு ஜனநாயக முதலாளித்துவம் (democratic capitalism) என்று கூறலாமா?

இந்தியாவில்
நுண் வியாபார உரிமை எந்த அளவிற்கு இருக்கிறது அதை இன்னும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம். (தொடரும்)

Saturday, January 27, 2007

From Russia with Love (அன்புடன் ரஷ்யாவிலிருந்து)

From Russia with Love (அன்புடன் ரஷ்யாவிலிருந்து)

இது என்ன, தமிழாக்கம் செய்யப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் படம் பற்றிய பதிவு என்று நினைச்சீங்களா? ஹி..ஹி.. அதெல்லாம் ஒன்றும் இல்லை. இப்போ இந்தியா விஜயம் செய்திருக்கும் ரஷ்ய அதிபர் புடின் நமக்கு அன்புடன் அளித்திருக்கும் அணு உலை பத்திய ஒரு பதிவுதான் இது. நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு புரியது. யாருடாது, புதுசா ஏதோ டிபென்ஸ் எக்ஸ்பெர்ட் இல்ல ந்யுக்கிளியர் சயின்டிஸ்ட் கணக்கா பதிவு போட வந்துருக்கான்னு நினைக்கிறீங்க, அப்படித்தானே? அய்யய்யோ, அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க, சும்மா, ஏதோ ப்ளாக் போடலாம்னு தோணின போது இந்த சப்ஜெக்ட் மாட்டிச்சு, அவ்வளவுதான். நமக்கு தெரிந்த வரைக்கும் பேப்பர்லெ படிச்சத வச்சு ஒரு சின்ன குறிப்பு.

கடந்த ஒண்றரை, இரண்டு வருடங்களாகவே அணுசக்தி சம்பந்தப்பட்ட செய்திகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. முதலில் ஈராக், பின்னர் வடகொரியா, அப்புறம் ஈரான் என அணுசக்தியை அழிவுக்கு பயண்படுத்தும் நாடுகள் பற்றி பேசப்பட்டன. ஆனால் இந்தியா பற்றி வேறு விதமாக பேசப்பட்டது. அணு சக்தி உடைய நாடாக இருந்தாலும், மிகவும் ஆக்க பூர்வமாக உபயோகப்படுத்தும் நாடு என்று உலக நாடுகளால் பேசப்பட்டு, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டது. தற்பொழுது ரஷ்யாவிடமிருந்து வந்திருக்கும் இந்த நேசக்கரம்.

ரஷ்யாவிற்கு 80,90களில் இருந்த அளவுக்கு வல்லமை இப்பொழுது இல்லா விட்டாலும், படை பலம், எண்ணை வளம், மற்றும் அணு சக்தியில் அது இன்னமும் ஒரு வலிமை மிகுந்த நாடாகத்தான் விளங்குகிறது. எனவே இந்த இரு நாடுகளுடன் இரண்டு கைகளையும் கோர்த்துச் செல்லும் பொழுது இந்தியாவும் வலிமை பெறுகிறது. இது எனது பார்வையில் இந்தியாவை ஒரு வல்லரசு நிலைக்கு இட்டுச் செல்லும் பாதையில் மற்றுமொரு படிக்கல் என்பேன்.

இந்த நிகழ்வு, அணு வியாபார குழுமத்தில், இந்தியாவிற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை. ப்ரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவிடமிருந்தும் இந்தியாவிற்கு சாதகமான நிலைப்பாடு வெளிப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

அமெரிக்காவிடன் செய்த அணு உடன்பாட்டிற்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தற்பொழுது ரஷ்யாவினுடன் ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்த எதிர்ப்பு ஒன்றும் இல்லாமல் போகும் அல்லது சற்று அடக்கி வாசிக்கப்படும்.

Wednesday, January 24, 2007

சோம்பேறி தூர்தர்ஷனும், தேசபக்தி மந்திரிகளும்.

சோம்பேறி தூர்தர்ஷனும், தேசபக்தி மந்திரிகளும்.

இந்தியாவிலே கிரிக்கெட் போட்டி ஆரம்பித்தால், இரு அணியினருக்கும் ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னரே தனியார் தொலைக்காட்சிக்கும், தூர்தர்ஷனுக்கும் இடையிலே போட்டி ஆரம்பிச்சுடும். போட்டித்தொடர், தொலைக்காட்சி ஒளிபரப்பு எல்லாம் எப்பவோ முடிவெடுத்த நிலையில், ஆட்டம் ஆரம்பிக்கற வரைக்கும் மக்களுக்கு தூர்தர்ஷன் ஒளிபரப்புமா இல்லையா எனத் தெரியாது.

வழக்கம் போல முதல் போட்டியிலெ பூவா, தலையா போட்டதுக்கப்பறம்தான் நம்ம தூர்தர்ஷன் தூக்கத்திலேருந்து முழிச்சு, ஐய்யயோ, ஆட்டம் ஆரம்பிச்சுடுசே, நாம ஒளிபரப்பலையே, மக்கள் நம்மை சும்மா வுட மாட்டங்களே, ஏதாவது பண்ணணுமே பதறி, தனியார் தொலைக்காட்சிகிட்டே போய், பிச்சைக்காரன் கணக்கா, அய்யா, அய்யா, எனக்கும் பங்கு கொடு, நானும் ஒளிபரப்பறேன், இல்லாட்டி, மக்கள் என்னை திம்சு பண்ணிடுவாங்க, ப்ளீஸ், ப்ளீஸ் ன்னு கெஞ்சி கையேந்தி நிக்கும். தனியார் தொலைக்காட்சி இப்பொதான் ரொம்ப பந்தாவா, சீ, சீ வேற இடம் போய் பாரு, நான் என்ன இளிச்சவாயனா? கோடி கோடியா கொட்டி வாங்கின உரிமையை உனக்கு தூக்கி கொடுக்கனுமா, சரிதான் போ உன் வேலைய பார்துக்கிட்டு ன்னு மூஞ்சிலே எச்ச துப்பாத குறையா விரட்டி அடிக்கும்.

அடி வாங்கின குழந்த மாதிரி, தூர்தர்ஷனும் ஓன்னு அழுது ஒப்பாரி வெச்சுகிட்டு, மந்திரி காலை போய் புடிச்சுகிட்டு கதறி அழும். னக்கு அவன் காசு குடுத்து வாங்கின முட்டாயை கொடுக்க மாட்டேங்கிறான், அவனை போய் அடிப்பா, அந்த முட்டாயை புடுங்கி எனக்கு கொடுப்பா ங்கிற கணக்கா. மந்தி(ரி) தான் தாதாவாச்சே, அது எப்படி, எம் புள்ளைக்கு கொடுக்காமே, அவன் மாத்ரம் திங்கறது. தற்றானா இல்லையா கேளு. இல்லைன்னா தாவடையிலே ரெண்டு போட்டு எடுத்துட்டு வாடா ன்னு திருப்பி அனுப்புவாரு.

தூர்தர்தஷனும் திருப்பி போய் கால்ல விழுந்து கெஞ்சி கூத்தாடி கேட்கும். நிலமைய பார்த்து தனியார் தொலைக்காட்சியும் சரின்னுட்டு சப்பி போட்ட மாங்கொட்டையை கொடுக்கறா மாதிரி, நான் ஒளிபரப்பினதுக்கபுறம் 15 நிமிஷம் கழிச்சு நீ ஒளிபரப்பு அப்படின்னு சொல்லும்.

இப்போ நம்ம மந்திரி தாதா இருக்காரே, உடனே தனியார் தொலைக்காட்சிக்கு தேச பக்தி இல்லே, எல்லாம் காசு பண்ற கும்பல் அப்டி, இப்டின்னு அறிக்க வுடுவாரு. அப்றமா மாங்கொட்டயை முழுக்க சப்பாதே, கொஞ்சம் வச்சு தூக்கி போடுன்னு சொல்லி, அந்த சப்பின மாங்கொட்டயை தூர்தர்தஷன் ஒளிபரப்பும்.

இதுலே என்ன வேடிக்கன்னா, தூர்தர்தஷன் ஏதோ காசே பண்ணாம அப்படியே கிரிக்கெட் மாத்திரம் தான் ஒளிபரப்பறா மாதிரி எல்லோரும் பேசறாங்கோ. தூர்தர்தஷன்லே பார்த்தா ஒரு ஒவருக்கு 4 பந்து தான் பார்க்கலாம். அவங்க வெளம்பரம் போட்டு முடிக்கரதுக்குள்ளே முத பந்து போட்டுர்ப்பாங்கோ. கட்சி பந்து போடரதுக்கு முன்னாடி வெளம்பரம் ஆரம்பிச்சுடுவாங்கோ.

வெண்ணய எடுக்கறது ஒர்த்தன், விரல சூப்பரது இன்னொருத்தன்ங்ற கணக்கா, எவனோ 2700 கோடி ரூபா கொடுத்த வியாபாரத்தை, இன்னொருத்தன் வந்து அல்வா கணக்கா துட்டு எதுவும் கொடுக்காம கேக்குறது நியாயமா? அப்டி கேட்டதும் இல்லாமெ, அதுலே விளம்பரம் எல்லாம் காண்பிச்சு காசு பண்ணனும்னு நினக்கிறது சரியா? தூர்தர்தஷனுக்கு தேச பக்தி நிறைய இருந்தா, காசு கொடுத்து முழு ஒளிபரப்பையும் வாங்குறதுதானெ? அப்படி முடியாட்டி, தனியார் தொலைக்காட்சி கொடுக்கறதை அப்படியே ஒளிபரப்பரதுதானே (அவங்க தனியா விளம்பரம் ஏதும் காண்பிக்காமே)? சரி அதுதான் முடியலே! தொடர் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே சீக்கிரமா முழிச்சுக்கிட்டு ஏதோ டீல் போட்டு எல்லா போட்டியையும் காமிக்கலாம்தானே? தொடர் ஆரம்பிச்சதுக்கப்பறம் முழிச்சுக்கிட்டு, துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு பறந்தா எப்படி?

காசேதான் கடவுள்னு ஆனபுறவு, எதுக்கு இந்த தேசபக்தி, பாசபக்தி எல்லாம்?

Saturday, January 20, 2007

கலைஞருக்கு நன்றி.

"தட்ஸ்டமில்" இணைய தளத்தில் இன்று(20/01/2007) வெளியாகியிருக்கும் "கேள்வியும் நானே, பதிலும் நானே" வரிசையில் கலைஞரின் கேள்வி--- பதில் ஒன்று.

-----------------=============================
÷PÒÂ: }[P÷Í •ßÁ¢x ö\ßøÚ ©õ|Pµõm]z ÷uºu¼À «sk® 99 Ch[PÎÀ {ØQ÷Óõ® Gߣx E[PÍx SØÓzøu }[P÷Í J¨¦U öPõshuõPuõ÷Ú Aºzu®?

P¸nõ{v: P®¥µ©õPz yUS ÷©øhUS |h¢x Á¢x yUSU P°øÓ •zuªmk ©õsk ©i¢uõ÷Ú Pmhö£õ®©ß& Gß •Pzøu ‰hõ÷u, Ãs £È÷¯ØÖ ÂÈ ‰hz u¯õµõP÷Á C¸UQ÷Óß GßÖ yUS ÷©øh°À öuõ[QÚõ÷Ú \uõ® E÷\ß & AÁºPÒ GÀ»õ® SØÓzøu J¨¦U öPõshuõP Aºzu©õ?


-----------------=============================
கலைஞர் என்ன சொல்ல வருகிறார். கட்ட பொம்மனும், சதாம் ஹுசேனும் ஒன்று என்றா? வெள்ளையனை எதிர்த்து, வரி கொடாமல் எதிர்த்து, தம் மக்களை காத்திட்ட கட்டபொம்மனும், தன் குடி மக்களையெ சுட்டுக் கொன்று, கொடுங்கோலாட்சி செய்த சதாமும் ஒன்று என்றா?

ஆனால் ஒன்று நிச்சயமாகப் புரிகிறது. சதாமுக்கும் தனக்கும் வேறுபாடில்லை என்றும், தானும் சதாமும் ஒன்றுதான் என்று, எந்தவித நிர்ப்பந்தமும் இன்றி தன் வாயினாலேயே வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

தமிழ் மக்களை ரவுடிகள் மூலம், அடித்து, வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, மாநகராட்சியை கைப்பற்றிய தனக்கும், தனது படையை வைத்து அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற சதாம் ஹுசேனுக்கும் வேறுபாடில்லை என்று ஒத்துக்கொண்டுள்ளார்.

கலைஞருக்கு நன்றி.

Tuesday, January 09, 2007

கொழும்பு பண்டாரநாயகே விமான நிலையம்

இந்த முறை டிக்கெட் ஸ்ரீலங்கன் ஏர்வேஸில் தான் கிடைத்தது. இங்கிருந்து கொழும்பு சென்று பின்னர் சென்னை. திரும்பி வரும் போதும் அதே வழி. சென்னையிலிருந்து திரும்பும்போது சுமார் 5 மணி நேரம் விமானநிலையத்திலேயே தங்க வேண்டிய நிலை. அப்போது கவனித்த சில:

  • சமீபத்தில் புதுப்பிக்க / விரிவு படுத்தப் பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியாகவும், கலை நோக்குடனும் உள்ளது.
  • வரியற்ற (Duty Free) கடைகள் கிட்டத்தட்ட, அபு தாபி, மஸ்கட் ஏர்போர்ட் பாணியில் உள்ளன.
  • இருக்கை வசதிகள், மற்றும் உணவுக் கூடங்கள் வசதியாக உள்ளன.
  • ஆயுர்வேத மசாஜ் கூடம் ஒன்றும் உள்ளது.
  • சிப்பந்திகளின் அன்பான அணுகுமுறை.
  • மொத்தம் 8 அள்ளது 10 விமானங்கள் மட்டுமே நிற்கக்கூடிய விமானதளம்.
  • மிகப் பரந்த அளவிளான குடியேற்றப் (immigration) பகுதி.

கொழும்பு விமானதளத்தைவிட பண்மடங்கு நில பரப்பைக் கொண்ட, சென்னை மற்றும் மும்பை விமான நிலையங்களில் காண முடியாத அழகும், வசதிகளும், கடைகளும், பயனியர் சௌகரியங்களும் நிறைந்து காணப்பட்டது.

சென்னை விமானநிலையம் பரப்பளவில் பெரியதாக இருந்தாலும் சென்னையில் பல அசௌகரியங்கள் உள்ளன.

புறப்பாடு மற்றும் வருகைக்கான கட்டடங்கள் தனித்தனியாக இருந்தாலும், இருவரும் ஒரே வழியாகத்தான் airbridgeலிருந்து வெளியெ வரவும் உள்ளே செல்லவும் முடியும். இறங்குபவர்களை நிறுத்தி வைத்து, ஏறுபவர்களை அனுப்ப முடியும்.

குடியேறல் பகுதி மிகவும் சிறியது. ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் வந்து விட்டால், பயணிகள் படும் சிரமம் அதிகம்.

உடமைகள் ஏற்க்கப்படும் இடம் ஒரே இருட்டு. அவ்வளவு வெளிச்சமான வெளிப்பகுதி இருந்தும், கண்ணாடி தடுப்புச்சுவர் போடாமல், சுவெரழுப்பி இருட்டடித்து விட்டார்கள்.

உங்கள் விமானம் கடைசி தளத்தில் நின்றால், நீங்கள் car parking இடத்தை அடைய சுமார் 1.5 km நடந்து இருப்பீர்கள்.

பயணப்படும் போதும் மிக நீண்ட தூரம் நடக்க வேண்டும். மாடியேறி சென்றதும், பாதுகாப்பு சோதனைக்கு மீண்டும் அதே தூரம் நடக்க வேண்டும். ஒரு தானியங்கி நடைபாதை வைத்திருக்கலாம்.

பாதுகாப்பு சோதனைக்கு முற்பட்ட இருக்கையிடமும் ஏதோ இரயில்வே கம்பார்ட்மெண்டில் இருப்பது போல ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும். வெளியே மலையும், பச்சைப் பசேலென்ற செடிகளும் தெரியும் இடத்தில் அதைப் பார்த்தவாறு இருக்கைகளை அமைக்காமல், அங்கெ கழிப்பறையும் கடைகளையும் கட்டி விட்டுள்ளார்கள். சோதனை முடிந்து உள்ளே போனல் அங்கேயும் அப்படித்தான். விமான ஓடுகளத்தை பார்த்து இருக்கைகளை அமைக்காமல் உள்ளடங்கி, இருட்டான இடத்தில் அமைத்துள்ளார்கள்.

இயற்கை வெளிச்சத்தை சற்றும் பயன்படுத்தாமல், வீணடித்துள்ளார்கள்.

இவை அனைத்தையும் காட்டிலும் மிக முக்கியமான ஒன்று. நான் கொழும்பு சென்ற விமானத்தில் 95 சதவிகிதம் சென்னை, திருச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொச்சின் பயனித்தவர்களே. கொழும்பு ஒரு மிகப்பெரிய குழிசியாக (Hub) மாறி வருகிறது.

ஹைதரபாத் மற்றும் பெங்கலூரு விமானநிலையங்களும் பலவிதமான நவீன வசதிகளுடன் வரும். அப்போது சென்னை நிலையம் இன்னும் பரிதாபகரமாகத்தான் இருக்கும்.