Thursday, March 23, 2006

அங்கீகரிக்கப் பட்ட அத்து மீறல்கள் # 2

திருமதி சோனியா காந்தி தன் பாராளுமன்ற தொகுதியையும், தேசிய ஆலோசனைக் குழு தலைமைப் பொறுப்பையும் ராஜினாமா செய்தது ஏதோ ஒரு மாபெரும் தியாகம் செய்தது போல் விவாதிக்கப் பட்டு வருவது, இன்றைய தினத்தின் மாபெரும் கேலிக்கூத்து ஆகும்.

திருமதி ஜெயா பச்சனின் பதவி பறிக்கப்பட்ட பொழுது, சப்தம் போடாமல் இருந்த காங்கிரஸ், இன்று அந்த நிலமை தன் தலைவிக்கு வரும் பொழுது, சட்டத்தை திருத்த முயற்சி மேற்கொண்டது. தனி நபருக்கு சாதகமாய் சட்டத்தைத் திருத்த முயற்சி மேற்கொண்ட செயலை எதிர்க் கட்சிகள் ஆட்சேபிக்க எத்தனிக்கும் சமயம், தன் பதவிகளை ராஜினாமா செய்து, தியாகம் செய்தது போல் ஒரு மாயையை திருமதி. சோனியா ஏற்படுத்தியுள்ளார்.

இவர் மேலும், தான் மீண்டும் ராய் பரேலி தொகுதியில் போட்டியிடப் போவதாய் அறிவித்து உள்ளார். காங்கிரஸ் செய்த தவற்றின் காரணமாய் இந்த ராஜினாமா செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்த நிகழ்வு இல்லை. மீண்டும் ஒரு முறை தேர்தல், மக்கள் வரிப் பணத்தில் ஏன் நடத்த வேண்டும்? இந்த தேர்தலின் முழு செலவையும் ஏன் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளக் கூடாது? இவ்வகையான தேர்தல் மாற்றங்களை ஏன் தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கக் கூடாது?

நாம், சோம்னாத் சாட்டர்ஜி மற்றும் பிற உறுப்பினர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Thursday, March 16, 2006

அங்கீகரிக்கப் பட்ட அத்து மீறல்கள்.

இன்றைய - 16/3/2006 "newindpress.com" ல் படித்த 2 செய்திகள்.

செய்தி 1:
EC shunts out Chennai Commissioner of Police:

The Election Commission has issued orders for transferring Chennai police commissioner R Natraj for making a statement in support of Chief Minister J Jayalalithaa, ‘‘who will be a candidate in the forthcoming Assembly election’’.......

காவல் துறை முற்றிலும் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறை. அதில் மாநகரக் காவல் மிக முக்கியமான ஒரு பிரிவாகும். அதன் தலைமை அதிகாரி தகுதி, அனுபவம் மற்றும் மிகப் பல ஆலோசனைகளுக்குப் பிறகு நியமிக்கப் படுகிறார். இதற்கான கட்டமைப்பு அரசாங்கத்திடமே உள்ளது.

தேர்தல் ஆணையம் ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் (ஜெயலலிதா ஒரு வேட்பாளராக இருக்கக் கூடும்) அவரை மாற்றம் செய்துள்ளது. அந்த பதவிக்கு வேறொருவரை நியமிக்கப் போகிறது. ஆணையத்தின் நோக்கம் தேர்தல் நல்ல முறையில் நடை பெற வேண்டும் - அவ்வளவே. இந்த இடைப்பட்ட 2 மாதங்களில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்தால் அதற்கு கவலை இல்லை. யாருக்கும் பதிலும் சொல்ல வேண்டியதில்லை.

இந்த அளவுக்கு ஆணையம் நாடாண்மை (governance) யில் தலையிட முடியுமன்றால், பேசாமல் ஜனாதிபதி ஆட்சியைப் பிரகடனம் செய்து விட்டு பின்னர் சட்டசபை தேர்தல்களை நடத்தலாம். அது மிகப்பல தேர்தல் முறைகேடுகளை தடுக்கும்..

செய்தி 2:

Mullaiperiyar dam issue:

"......
The Kerala Irrigation and Water Conservation (Amendment) Bill passed in Thiruvananthapuram seeks to grant new powers to the Dam Safety Authority prosed under the original Act. As per the provisions of the Bill, the Authority, a body of dam and legal experts, could direct the custodian of a dam to suspend functioning of, or even decommission of a dam. In the case of Mullaiperiyar Tamil Nadu is the custodian of the dam...."

உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பை கூறியது. உடனே கேரள அரசாங்கம் சட்ட மாற்றம் செய்து அந்த தீர்ப்பை திருத்தி எழுத முயற்சி செய்திருக்கிறது. இந்தியன், இந்தியனின் நலம் என்பது போய், தன் மொழி மக்கள், அவர்தம் நலம் என்று எப்போதே வந்து விட்டது. இப்பொது தன் சாதி, தன் குடும்பம் மட்டுமே பிரதானம் என்கின்ற நிலை வந்து விட்டது. இந்தியாவின் கட்டுக் கோப்பு வேகமாக குலைகின்றதோ என்கின்ற பயம் எனக்குள் வந்தது. நான் ஒரு இந்தியன் என்கின்ற எண்ணம் "கார்கில்" வரும் போது மட்டுமே வரும் போலும்......