Tuesday, October 02, 2007

தேவ கவு(த்து)டா

இது இன்னொரு அரசியல் குடும்பம். அப்பா முன்னாள் முதல்வர், பிரதமர், அண்ணன் முன்னாள் மந்திரி, சட்டசபை உறுப்பினர், தானும் ஒரு முதல்வர், சட்டசபை உறுப்பினர்.

பிப்ரவரி 3ம் தேதி 2006 ல் குமாரசாமி கர்நாடக முதலமைச்சராக பா.ஜ. பா.வின் உதவியோடு பதவி ஏற்றார். மீதமிருக்கும் 40 மாதங்களில், 20 மாதம் அவர் முதல்வாராகவும், பின்னர் பாஜபா வும் ஆட்சி நடத்தும் என்ற உடன் படிக்கையின்படி. 20 மாதம் நேற்றோடு முடிவடைந்து, இன்று பாஜபாவிடம் ஆட்சி ஒப்படைக்கப்படவேண்டும்.

ஆனால், பதவி ஆசை யாரை விட்டது. இப்போது, அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து, தினம் ஒரு நொண்டிச் சாக்கு சொல்லிக்கொண்டு, ஆட்சியை ஒப்படைக்க மறுக்கிறார்கள். முதலில், குமாரசாமி ஆட்சி அமைக்கும் போதே ஒரு மாதிரி டிராமாவெல்லல்ல்ம் ஆடினார் தேவ கவுடா. பின்னர் ஏதோ வேறு வழியில்லாதது போல அதை ஒத்துக் கொண்டார். பின்ன என்ன, தன் மகன் முதல் மந்திரி ஆவது ஒரு தந்தைக்கு பெருமையாக இருக்காதா என்ன?

20 மாதம் முடிந்து ஆட்சியை ஒப்படைக்கும் சமயம் வரும் போது ஜகா வாங்குகிறார். குமாரசாமி மிக நன்றாக ஆட்சி நடத்துவதாகவும், அவருக்கு மக்கள் மத்தியில் மிக நல்ல பெயர் இருப்பதாலும், அவரையே தொடர்ந்து முதல் மந்திரியாக இருக்க விடுமாறும், யஷ்வந்த் சின்காவிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்ததின் பெயரில், கட்சியின் செயற்குழு 5ம் தேதி கூடி முடிவெடுக்கும் என்று தள்ளிப்போடுகிறார். நிச்சயமாக பாஜபாவிற்கு ஆட்சியைத் தரப்போவதில்லை. வேறு யார் ஆதரவுடனாவது ஆட்சியைத் தொடர வைக்க சமயம் வாங்குகிறார். அவர்களிடமும் இன்னும் 20 மாதம் இருக்கிறது. நான் 10 மாதம், நீ 10 மாதம் என்று பேரம் பேசி, 10 மாததிற்குப் பிறகு சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தி விடுவார்.

இவர் ஏதோ ஒரு "தூங்குமூஞ்சி" பிரதம மந்திரி என்று தான் நினைத்திருந்தோம், ஆனால் மனிதன் ஒரு எமகாதகர். சரியாக பாஜபாவை கவிழ்த்து விட்டார்.

2 comments:

மாசிலா said...

இரு குரங்குகள் அப்பத்தை பங்கிட்டு தின்னும் கதைதான் போங்கள்!

பயங்கர தமாசு!





பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Bala said...

மாசிலா,

மிக நன்றாக சொன்னீர்கள்.

வரவுக்கு நன்றி