Sunday, June 17, 2007

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா !!!

சவுதி தலைநகர் ரியாத் வாழும் முனைவர் திரு மாசிலாமணி அவர்களின் உன்னத கண்டுபிடிப்பான புற்றுநோய் கண்டறியும் முறை (Masila's cancer detector) புற்றுநோய் சம்பத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் இன்னொரு மைல்கல் என்று கூறலாம்.

புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருப்பது என்பது பலருக்கும் சற்று முற்றிய நிலையில் தான் தெரியும்.காரணம், சாதாரண மருத்துவ மனைகளில் அதனை கண்டறியும் திறன் அல்லது உபகரணங்கள் இருப்பதில்லை. மருத்துவர்கள் சந்தேகப்பட்டு pathalogical பரிசோதனை செய்த பின்தான் தாங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கல்வியறிவு உள்ளவர்களுக்கே தெரிய வரும். கல்வியறிவில்லாத மற்றும் ஏழை மக்களுக்கு அதற்கும் வசதியில்லாமல், முற்றிய நிலையில் மருத்துவமும் செய்ய இயலாமல் முடிவை எதிர்நோக்கி இருக்கும் நிலைதான் பெரும்பாலும் இருக்கும். அத்தகைய நிலையை மாற்ற வந்த ஒரு வரப்பிரசாதம் தான் முனைவர் திரு மாசிலாமணியின் கண்டுபிடிப்பு. 10 வருட முயற்சிக்குப்பின் இந்த கண்டுபிடிப்பில் வெற்றி கண்டுள்ள இவருடன், இவர் புதல்வரும், ஆராய்ச்சியாளருமாகிய முனைவர் திரு.மாசிலாமணி இள்ங்கோவனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்த முறை மூலமாக செலவேயில்லாமல் ஒரு மனிதரின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளைக் கொணடே ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டு பிடிக்க முடியும். அதாவது ஒரு புற்றுநோய் மருத்தவமனைக்கோ அல்லது தனித்தன்மை (specialised) பரிசோதனைக்கூடங்களுக்கோ செல்ல வேண்டியதில்லை. உங்கள் ஊரில் இருக்கும் primary health center களிலேயோ அல்லது சிறு பரிசோதனைக்கூடங்களிலேயோ இந்த சோதனையை செய்து கொள்ளலாம்.

http://www.hindu.com/2006/01/05/stories/2006010510990200.htm

http://www.cytotrontreatment.com/redherringcancer.pdf

இந்த சோதனை, ஒளிக்கதிர் (laser) வீச்சு மூலம் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளில் செலுத்தி அதிலிருந்து வெளிப்படும் மின்னதிர்வுகளை கணிணியில் பதிவு செய்து, புற்றுநோய் மூலக்கூறுகளை கண்டறியும் முறையாகும். இதற்கான காப்புரிமையை இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளில் பெற்றுள்ளார். இது பற்றி அவர் பெற்ற காப்புரிமையின் சுருக்கம்:

An apparatus for optical analysis of body fluids for cancer detection comprising: a light source for generating light rays,(incoherent lamp or laser) an excitation wavelength determination means, a grating for receiving optical rays from the body fluids, said optical rays being received at right angles to the optical rays incident on the said body fluids, an optical conversion means for receiving optical rays of from the said grating and converting the said optical rays to electrical signals, a computer for receiving and processing said the electrical signals. And the technique and process of the following preparing the blood and urine samples and their extracts. obtaining emission excitation and synchronous spectra. ratio fluorometry to identify the spectral signature of cancer specific molecules such as Porphyrin, Billurubin, Billiverdin, Riboflavin, Tryptophane, NAD(P)H etc. evaluating pre-malignant, early and advanced stages of cancer of any etiology.

(http://www.freepatentsonline.com/20060170928.html)

http://www.freshpatents.com/Masila-s-cancer-detector-based-on-optical-analysis-of-body-fluids-dt20060803ptan20060170928.php

முனைவர் திரு மாசிலாமணியின் இந்த கண்டுபிடிப்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தினரால் (ICMR), அகில இந்திய மருத்துவக்கழகம் (All India Institute of Medical Sciences) தில்லி, மற்றும் குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி மையம், அகமதாபாத் மூலமாக பலதரப்பட்ட பரிசோதனகளுக்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.மத்திய சுகாதார அமைச்சகத்தின் அழைப்புக்கிணங்க ICMR இந்த சோதனகளை செய்து, 26 மே, 2007ல் தகுதிச் சான்றிதழையும் வழங்கியுள்ளது. இவரின் முயற்சிக்கு இந்திய ஜனாதிபதி மேதகு திரு அப்துல் கலாமின் பாராட்டும் ஆதரவும் கிடைத்துள்ளது.

இவர் இதன் பயனை ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மூலமாக ஒரு சமுதாய சேவையாக செய்ய திட்டமிட்டுள்ளார். கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த உள்ளார். இதன் முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டிணத்தில் சூலை மாதம் 12ம் தேதி முதல் 19 வரை, பெரியபட்டிணத்தை சேர்ந்த வெளிநாடு வாழும் இந்தியரின் உதவி கொண்டு, முதல் முகாம் திட்டமிடப்பட்டுள்ளது. இதை ஒரு உலகளாவிய சேவையாக செய்யும் பொருட்டு அடுத்த முகாம் பங்களா தேசத்தில் அக்டோபர் மாதம் நடக்கவுள்ளது.

http://www.yahind.com/articles/directory.php?id=127

திருச்சியை சேர்ந்த GVN Institute of Medical Science and Hospital இந்த சேவையை தொடங்கவுள்ளது.

இந்த புற்றுநோய் சோதனையை, ஒரு கட்டாய சோதனையாக பள்ளி சிறார்களுக்கும்,மருத்துவ முகாம்களிலும், வேலையில் சேர்வதற்கான மருத்துவ சான்றிதழ் சோதனைகளிலும் மற்றும் வருடாந்தர மருத்துவ சோதனைகளிலும் சேர்க்கப் பட வேண்டும். ஏனென்றால் முன் தடுத்தலே, நோய் கண்டு குணப்படுத்துதலை விட முக்கியம்.

58 வயதாகும் முனைவர் திரு மாசிலாமணி, ஒளிக்கதிர் இயல்பியலில் முனைவர் (Ph.D in Laser Physics) பட்டம் வாங்கியது Indian Institute of Technology, Madras லிருந்து.இவர் அண்ணா பல்கலையில் ஒளிக்கதிர் துறையின் தலைவராகவும் இருந்துள்ளார்.இவர் தற்பொழுது சவுதியில் அரசர் சவுத் பல்கலையில் ஒளிக்கதிர் இயல்பியல் பேராசிரியராக இருக்கிறார்.

http://www.iitmadras.org/news/2006/jan02C/

இவரும் இவர் புதல்வர் முனைவர் திரு மாசிலாமணி இளங்கோவன் அவர்களும் திருச்சி பாரதிதாசன் பல்கலையில் வருகைதரும் பேராசிரியர்களாக (Visiting Professors of the School of Bio-Medical Sciences) நியமிக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞானத்தில் மட்டுமல்லாமல், தமிழில் மிக ஈடுபாடு கொண்டவர். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் நடத்தப்படும் எழுத்துக்கூடத்தில் மிக முக்கிய பங்காற்றி வருபவர். தற்போது தாக்கம் தந்த தமிழர்கள் என்கிற தலைப்பில் அவர் கண்ணோட்டத்தில் தலை சிறந்த 10 தமிழர்களைப் பற்றி சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இந்த சொற்பொழிவுகளின் தொகுப்பு ஒரு புத்தகமாக வெளி வரவுள்ளது.

இவர் துணைவியார் திருமதி விஜயலச்சுமியும் ஒரு எழுத்தாளரே. இவரது புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

முனைவர் திரு மாசிலாமணியின் கண்டுபிடிப்பு தமிழர்களையும், இந்தியர்களையும் தலை நிமிர்ந்து பார்க்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புற்றுநோய் கண்டறியும் சாதனம் உலக மக்கள் அனைவரையும், காலனின் தூதனாகிய புற்றுநோயை புறந்தள்ளி செவ்வனே வாழச் செய்யும்.

இந்த விஞ்ஞானிகளுக்கு தமிழ் சமுதாயம் உள்ளிட்ட மக்கள் சமுதாயம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. அவர்கள் பல்லாண்டு வாழ, மேலும் சீர்பணிகள் பல செய்திட வாழ்த்துவோம், போற்றுவோம், வணங்குவோம்.

6 comments:

SurveySan said...

செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி.

Unknown said...

மிகவும் சந்தோஷமான செய்தி. திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களையும், வீணாய் போன்ற விளையாட்டு வீரர்களையும் தவிர்த்து, மக்கள் இது போன்ற சிறந்த மனிதர்களைத் தங்கள் குழந்தைகளுக்கும், ஊடகங்கள் இளைய சமுதாயத்தினர்க்கும், முன்மாதிரியாக வைக்கலாம்

வடுவூர் குமார் said...

இந்த கண்டுபிடிப்பால் ஏழை குழந்தைகள் நலம் பெற வேண்டும்.
திரு மாசிலா... தமிழனை தலை நிமிர வைத்துவிட்டீர்கள்.

bala said...

மகத்தான கண்டுபிடிப்பு;திரு மாசிலாமணியின் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசே கொடுக்கல்லாம்;அவ்வளவு உயர்ந்தது.மேலும் மேலும் அவர் சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துக்கள்.

பாலா

Anonymous said...

ஐயா மாசிலாமனி பற்றிய மற்றோரு பதிவை படிப்பதற்கு இங்கே சென்று பார்க்கவும்.

http://tmpolitics.blogspot.com/2007/06/blog-post_7654.html

Anonymous said...

philippe nromano colloids unstuck ongoing surveymonkey teachers pharmie indfrag flies envoys
lolikneri havaqatsu