Sunday, June 17, 2007

கேப்பையிலே நெய் வழியிதுன்னா கேக்கறவனுக்கு புத்தி இல்லாமயா போயிடும்

ஐயோ.. இந்த கூத்த பாருங்கடா!! அரசாங்கமே ஊழல் அரசியல் வாதிங்களை தண்டிக்க வழி செய்யுமாம். கேப்பையிலே நெய் வழியிதுன்னா கேக்கறவனுக்கு புத்தி இல்லாமயா போயிடும்.

அதாவது மக்களவைத்தலைவரும் ராஜ்யசபைத்தலைவரும் MPங்க மேல நடவடிக்க எடுக்கறதுக்கும், சட்டசபைத்தலைவர் MLA மேலே நடவடிக்க எடுக்கறதுக்கும் அனுமதி கொடுப்பாங்களாம். இதுக்கான ஊழல் தடுப்பு சட்ட திருத்த மசோதா வரப்போர தொடர்லே தாக்கல் செய்வாங்களாம்.

இந்த திருத்த மசோதா எதனாலேங்கறீங்க? 1993 லே JMM MP க்களை நரசிம்ம ராவ் காசு கொடுத்து வாங்கினாருள்ள, அதுலெ 1998ம் வருஷம் உச்ச நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை அமல் படுத்த போறங்களாம். சிரிப்பா இல்லே? 5 வருசம் கழிச்சு வந்த தீர்ப்புக்கு, அனுமதி கொடுக்கறதுக்கான சட்ட திருத்தமே 10 வருஷம் ஆச்சின்னா, இன்னும் டைட்டா சட்டம் போடனும்ன்னா எத்தனை வருஷம் ஆவும்? டைட்டா சட்டம் வேணுமின்னா பக்கத்லே இருக்ற carpenter ஐ தேடி போவ வேண்டியதுதான்.

இதிலே பாருங்க ஒரு வேடிக்க. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஒரு தீர்ப்பிலே லஞ்சம் வாங்கறது அஃபிசியல் டுயுடி இல்லேங்கறதாலெ, சட்டசபை தலைவரோட முன் அனுமதி வாங்கத் தேவையில்லன்னு தீர்ப்பு கொடுத்திருக்கு. அப்பறம் எதுக்கு இந்த சட்ட திருத்தம், சும்மா உப்புக்கு சப்பாணிக்குன்னுட்டு.

ஆனா இதையெல்லாம் மீறி உத்தரபிரதேச கவர்னரு, தாஜ் வளாக ஊழல் வழக்கில மாயாவதி அம்மா மேலே கேஸ் போட CBIக்கு அனுமதி தர மாட்டேன்னாரே?

என்னிக்காவது ஆளும் கட்சி MP, MLA மேலே வழக்கு போட ஆளும் கட்சியாலே நியமிக்கப்பட்ட சபைத்தலைவரு அனுமதி கொடுப்பாரா? யாராவது சொந்த செலவுலே சூனியம் வச்சுப்பாங்களா? எதிர்க்கட்சி MP, MLA ன்னா, சும்மா கிடச்சா சித்தப்பாக்கு ரெண்டுன்னுட்டு உடனே கொடுப்பாங்க.

அரசியலுக்கு வரதே நாலு காசு பாக்கத்தானே! அடி மடியிலேயே கை வக்க வுட்டுடுவாங்களா?

No comments: