Tuesday, August 21, 2007

மறுஅவதாரம் எடுப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி வேண்டும்.

மறுஅவதாரம் எடுப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி வேண்டும்.

என்ன தலை சுத்துதா? இது ஏதோ மடாதிபதியோ அல்லது, நாத்திகவாதியோ சொன்னது அல்ல. ஒரு அரசாங்கத்தின் மந்திரி, மறுஅவதாரம் எடுப்பதை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக எடுத்திருக்கும் முடிவுதான். எங்கே என்று கேட்கிறீர்களா? நல்லவேளை, நம் நாட்டில் இல்லை. சீனாவில்.

சரி சரி.. ஏன் இந்த சட்டம் ? திபெத்திய மதத் தலைவரான தலாய் லாமா ஒவ்வொரு முறையும், தற்போதைய வாழ்க்கை முடிந்தவுடன், மறு அவதாரம் எடுத்து மீண்டும் வருவதாக நம்பிக்கை. தற்போதைய தலாய் லாமா, தான் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லையில் மறு அவதாரம் எடுக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், சீன அரசாங்கம், இந்த சட்டத்தை இயற்றி, தனக்கு ஏற்புடையவரை புதிய தலாய் லாமாவாக முன்னிருத்தவே இந்த சட்டம்.

நமக்குத் தெரிந்ததெல்லாம், பிறப்புக்களை கட்டுப்படுத்துவதுதான். சஞ்சய் காந்தி செய்த கட்டாயக் கருத்தடை மாதிரி. ஆனால் சீனா இன்னும் ஒருபடி மேலே போய் மறு அவதாரத்தையும் கட்டுப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

இது இப்படியே போனால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்:

“புதிதாக அமலுக்கு வந்த சட்டத்தின்படி இந்த அரசாங்கம், ராமர் என்கிற கடவுளை கண்டுபிடித்து அறிவித்துள்ளது. அவர் நேற்று அரசாங்கத்துடன் நடத்திய பேச்சு வார்த்தையில், தான் ராமேஸ்வரத்தில் கட்டிய பாலத்தை, சீதையை மீட்டு இந்தியா திரும்பியவுடனே அழித்து விட்டதாகவும், இப்போது ராமர் சேது என்கிற மணற் திட்டு தாம் கட்டிய பாலம் இல்லை யென்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். அவர் மேலும் அயோத்தியில் சர்ச்சைக்குறிய இடத்தைப் பார்த்துவிட்டு, நான் பிறந்த இடம் அது அல்லவே அல்ல. அங்கிருந்து இன்னும் 100 கி.மீ தள்ளி இப்பொழுது ஒரு பொட்டல் வெளியாயிருக்கும் இடத்தில் தான் பிறந்தேன் என்றார்.”

உங்கள் கற்பனைகளையும் தாராளமாக பின்னுட்டம் இடலாம்.

(http://www.msnbc.msn.com/id/20227400/site/newsweek/)

No comments: