Tuesday, May 16, 2006

கர்நாடகாவின் தோல்வி........

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் விரிவாக்கம் பெங்களூரில் வேண்டாம் : கர்நாடக முதல்வர்
15 மே 2006
ஆதாரம்: வெப் உலகம்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தேவையான இடவசதிகளை பெங்களூரில் அமைத்துக் கொடுக்க முடியாத காரணத்தால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் விரிவாக்கத்தை கர்நாடகாவின் பிற பகுதிகளில் அல்லது மற்ற மாநிலங்களில் ஏற்படுத்திக் கொள்ளும்படி கர்நாடக முதல்வர் எச்.டீ. குமாரசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், `மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் தொழில்துறையை விரிவாக்க அரசு மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. அதற்கு தொழில்துறை முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.


பெங்களூரில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதிப்புகளையும் விளைவுகளையும் ஆராய வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளதை அரசு உணர்வதாக கர்நாடக முதல்வர் தெரிவித்தார்.


சமீபத்தில் பெங்களூர் அருகில் இடவசதி ஏற்படுத்திக் கொடுக்க முடியாத காரணத்தால் கர்நாடகாவில் அமையவிருந்த பேப்சிட்டி (Fabcity) ஆந்திரபிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


News sourced from: http://content.msn.co.in/Tamil/InfoTech/News/0605-15-4.htm

ஒரு பக்கம், முதலீட்டை துரத்தும் மாநிலங்கள். (கொல்கத்தா கூட துரத்துகிறது). மறுபக்கம், இங்கே வராதே, வெளியெ போ என்கிற கர்நாடகா.
திட்டமின்மை, தொலைநோக்கின்மை மற்றும் விழிப்பின்மை காரணாமாக பெங்களூரு திணருகின்றது. இப்பொழுது விட்டால் பிறகு பிடிக்கமுடியுமா?

1 comment:

கசி said...

நல்ல கட்டுரை.