Monday, July 30, 2007

"திருடினது யாருன்னு ஆதாரத்தோட சொன்னா, நாங்க உடனே புடிச்சுக்கொடுக்கிறோம்"

"எந்தெந்த அரசியல் வாதிகளின் கைகளில் அரசு நிலங்கள் சிக்கியுள்ளது என்பதை மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் தெரிவித்தால் அவற்றை கைப்பற்ற அரசு தயாராக உள்ளது" என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
சில நாட்கள் முன், "எந்தெந்த கல்லூரிகள் அதிக நிதி வசூல் செய்கின்றன என்பதை ஆதாரத்துடன் தெரிவித்தால் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று மருத்துவர் ராமதாசுவிற்கு பதில் அளித்தார்.
 
இனிமே நாம போலீஸ் ஸ்டேஷன்லே போய் ஏதாவது திருட்டுப் புகார் கொடுத்தா, அங்கே இருக்கிற காவல் அதிகாரிகளும் "திருடினது  யாருன்னு  ஆதாரத்தோட  சொன்னா, நாங்க உடனே புடிச்சுக்கொடுக்கிறோம்" ன்னு சொல்லப் போறாங்க...
 
இன்னும் எந்தெந்த மாதிரியான அறிவிப்புகளைப்  பார்க்கப்  போகிறோமோ  தெரியவில்லை.  


Pinpoint customers who are looking for what you sell.

1 comment:

Anonymous said...

ஹா! ஹா! நல்ல நகைச்சுவை.