Monday, July 23, 2007

இப்படியும் ஒரு மனிதர் .. கலாம்!!!

பாலி நரிமன் எழுதிய கட்டுரையிலிருந்து:

மே, 2006ல் கலாமின் உறவினர்கள் தில்லிப் பட்டினம் சுற்றிப் பார்க்க சென்றார்கள். மொத்தம் 53 பேர். அவர்களை இரயில் நிலையத்திலிருந்து அழைத்து வருவதிலிருந்து திரும்பி செல்லும் வரை அவர்களின் எல்லாத் தேவைகளையும் கவனித்துக்கொள்ளுமாறு, உதவியாளர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதே சமயம், அவர்களுக்கு ஆகும் செலவுகளுக்கு ( உறவினர்கள் தங்கிய அறைகளுக்கு வாடகை,  உணவு வகைகளுக்கான நேரடி செலவுகள், போக்கு வரத்து செலவுகள் போன்றவை)  தனிக்கணக்கு வைத்துக்கொள்ளுமாறு, அன்றாட வரவு செலவு பார்க்கும் அதிகாரியிடம் கூறியிருந்தார்.

உறவினர்கள் விடை பெற்று சென்றதும் அந்த செலவினங்களின் தொகையை (ரூபாய் 3,54,924)  தன் சொந்த கணக்கிலிருந்து கட்டினார். உறவினர்களின் போக்கு வரத்திற்கு ராஷ்டிரபதி பவனின் வாகனங்கள் ஒன்று கூட உபயோகப்படுத்தப் படவில்லை.

இது பற்றிய விவரங்களை வெளியில் சொல்லக்கூடாதென்றும் ஊழியர்களை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இப்போது விடை பெற்று செல்லும் போதும் சிறிய இரண்டு பெட்டிகள் (இந்த பெட்டிகள் நிச்சயமாக  'அந்த பெட்டிகள்' அல்ல) மட்டும்தான் எடுத்துப்போகப் போகிறார்.
 
ம்ஹும்......இப்படியும் ஒரு மனிதர்...


Got a little couch potato?
Check out fun summer activities for kids.

5 comments:

Sivakumar said...

கலாம் - ஓர் எடுத்துக்காட்டு நம் நாட்டின் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் வியாதிகளுக்கும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாலா!
எளிமைக்கும்;அரசியல் தூய்மைக்கும் காமராஜரை உதாரணமாகச் சொல்லி வந்தார்கள்.
இப்போ இவரையும் சேர்க்கட்டும். அரசியல் வியாதிகளும் இவரைப் பார்த்துப் படிக்கட்டும்.

Anonymous said...

இப்படிப்பட்ட எளிமையான மனிதரை ஊழல் மாகாராணி ஜெ.ஜெ ஆதரவளித்து ஆச்சரியமா இல்லை!!!!!

என்னய்யா நாட்டில நடக்குது?

புள்ளிராஜா

Anonymous said...

இப்படிப்பட்ட எளிமையான மனிதரை ஊழல் மாகாராணி ஜெ.ஜெ ஆதரவளித்து ஆச்சரியமா இல்லை!!!!!

என்னய்யா நாட்டில நடக்குது?

புள்ளிராஜா

Unknown said...

intha seithiyai writer Gnani ponrorkal padikkavendum.

O pakkangalil(anantha vikatan)
Kalam thaguthi illathavar enru ezuthinaar Gnani.