Sunday, November 11, 2007

அங்கே சுண்டு விரலை அசைச்சா, தில்லியிலே நாற்காலியல்லவா காலியாகி விடும்.

நந்திகிராம் ஒரு ‘யுத்தகளம்’ - மத்திய அரசின் பாராமுகம். அது சரி முதலில் முகம் என்று ஒன்று இருந்தாலல்லவோ பார்ப்பதற்கு. மேற்கு வங்காள ஆளுனர் நந்திகிராம் ஒரு ‘யுத்த களம்’ ஆக மாறிவிட்டது. எந்த ஒரு அரசாங்கமும், அந்நிலையை மாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சும்மா இருக்க கூடாது என்று சாட்டையடி கொடுத்துள்ளார்.

மேலும், மேதா பாட்கர் போன்ற சமுதாய சிந்தனையாளர்களின் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது, நாகரீகமான அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று வேறு கூறியுள்ளார்.

CPI-M கட்சியாளர்கள் நந்திகிராமத்தை மீண்டும் ‘அபகரித்திருப்பது’ ஒரு சட்ட விரோதமான செயல் என்றும் ஒத்துக்கொள்ள முடியாதவொன்று என்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

நந்திகிராம் ஒரு ‘யுத்தகளம்’ என்று மேற்கு வங்காள உள்துறை காரியதரிசி கூறியதையே ஆளுனரும் மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால் இடது சாரி கட்சிகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. அவர் தன் எல்லை மீறி நடப்பதாகவும், சார்பற்று நடப்பதாகவும் கூக்குரல் இடுகின்றன. இதன் நடுவில் அவர்கள் மந்திரி சபையிலிருந்து ஒரு அமைச்சரும் (கோஸ்வாமி) அரசின் நிலையை எதிர்த்து ராஜினாமா செய்திருக்கிறார்.

உண்மையான நிலை தனக்கு பாதகமாயிருப்பதால், ஆளுனரின் கண்டனத்தையும் அவரின் நிலைப்பாட்டையும் அரசு எதிர்க்கிறது. ஆளுனர் என்றால் என்ன கர்நாடகா ஆளுனர் தாக்கூர் போல கை கட்டி வாய் பொத்தி உட்கார்ந்திருக்க வேண்டுமா? அத்தனை நாள் அவகாசம் கொடுத்தும் காங்கிராசால் குதிரைப்பேரம் பேசி ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பாஜபா வை நேற்று அரசமைக்க அழைத்துள்ளார். ஆனால், காந்தி உண்மையான அக்கறையோடு செயல்பட்டால் அதற்குக் கூப்பாடு, மத்திய அரசும் மவுனம்.

ஒரு நடுநிலையான அரசாயிருந்தால் ஆளுனரின் இந்த பேட்டியையே அவரின் அறிக்கையாக எடுத்துக்கொண்டு இந்நேரம் மேற்கு வங்க அரசை கலைத்திருக்க வேண்டும். ஆனால், எப்படிப் பண்ண முடியும்? குடுமி அங்கேயல்லவா இருக்கிறது. அங்கே சுண்டு விரலை அசைச்சா, தில்லியிலே நாற்காலியல்லவா காலியாகி விடும்.

இதே எதிர்கட்சியினர் ஆளும் மாநிலமாக இருந்தால் இத்தனை நேரம் ஜனாதிபதி ஆட்சி அமுலாயிருக்கும். ராத்திரியோட ராத்திரியா, அப்துல் கலாமை மாஸ்கோவிலே கையெழுத்து போட வச்சவங்க தானே இவங்க.

ஆனா ஒன்னு, வரப்போகிற பாராளுமன்றத் தொடர், அணு சக்தி ஒப்பந்தம், நந்திகிராம் ரெண்டுலேயே அடிபட்டுப்போயிடும். சாட்டர்ஜியோ, ப்ளீஸ், ப்ளீஸ்.. சிட் டவுண், என்று கெஞ்சியே, (சபையைத் தள்ளித் தள்ளி வச்சு, பாராளுமன்றக் கட்டிடம் கடைசியிலே சென்னைக்கே வந்து விட்டாலும் ஆச்சரியப் பட வேண்டாம் :-))))))) ) நொந்து போக வேண்டியதுதான்.

No comments: