Tuesday, January 09, 2007

கொழும்பு பண்டாரநாயகே விமான நிலையம்

இந்த முறை டிக்கெட் ஸ்ரீலங்கன் ஏர்வேஸில் தான் கிடைத்தது. இங்கிருந்து கொழும்பு சென்று பின்னர் சென்னை. திரும்பி வரும் போதும் அதே வழி. சென்னையிலிருந்து திரும்பும்போது சுமார் 5 மணி நேரம் விமானநிலையத்திலேயே தங்க வேண்டிய நிலை. அப்போது கவனித்த சில:

  • சமீபத்தில் புதுப்பிக்க / விரிவு படுத்தப் பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியாகவும், கலை நோக்குடனும் உள்ளது.
  • வரியற்ற (Duty Free) கடைகள் கிட்டத்தட்ட, அபு தாபி, மஸ்கட் ஏர்போர்ட் பாணியில் உள்ளன.
  • இருக்கை வசதிகள், மற்றும் உணவுக் கூடங்கள் வசதியாக உள்ளன.
  • ஆயுர்வேத மசாஜ் கூடம் ஒன்றும் உள்ளது.
  • சிப்பந்திகளின் அன்பான அணுகுமுறை.
  • மொத்தம் 8 அள்ளது 10 விமானங்கள் மட்டுமே நிற்கக்கூடிய விமானதளம்.
  • மிகப் பரந்த அளவிளான குடியேற்றப் (immigration) பகுதி.

கொழும்பு விமானதளத்தைவிட பண்மடங்கு நில பரப்பைக் கொண்ட, சென்னை மற்றும் மும்பை விமான நிலையங்களில் காண முடியாத அழகும், வசதிகளும், கடைகளும், பயனியர் சௌகரியங்களும் நிறைந்து காணப்பட்டது.

சென்னை விமானநிலையம் பரப்பளவில் பெரியதாக இருந்தாலும் சென்னையில் பல அசௌகரியங்கள் உள்ளன.

புறப்பாடு மற்றும் வருகைக்கான கட்டடங்கள் தனித்தனியாக இருந்தாலும், இருவரும் ஒரே வழியாகத்தான் airbridgeலிருந்து வெளியெ வரவும் உள்ளே செல்லவும் முடியும். இறங்குபவர்களை நிறுத்தி வைத்து, ஏறுபவர்களை அனுப்ப முடியும்.

குடியேறல் பகுதி மிகவும் சிறியது. ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் வந்து விட்டால், பயணிகள் படும் சிரமம் அதிகம்.

உடமைகள் ஏற்க்கப்படும் இடம் ஒரே இருட்டு. அவ்வளவு வெளிச்சமான வெளிப்பகுதி இருந்தும், கண்ணாடி தடுப்புச்சுவர் போடாமல், சுவெரழுப்பி இருட்டடித்து விட்டார்கள்.

உங்கள் விமானம் கடைசி தளத்தில் நின்றால், நீங்கள் car parking இடத்தை அடைய சுமார் 1.5 km நடந்து இருப்பீர்கள்.

பயணப்படும் போதும் மிக நீண்ட தூரம் நடக்க வேண்டும். மாடியேறி சென்றதும், பாதுகாப்பு சோதனைக்கு மீண்டும் அதே தூரம் நடக்க வேண்டும். ஒரு தானியங்கி நடைபாதை வைத்திருக்கலாம்.

பாதுகாப்பு சோதனைக்கு முற்பட்ட இருக்கையிடமும் ஏதோ இரயில்வே கம்பார்ட்மெண்டில் இருப்பது போல ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும். வெளியே மலையும், பச்சைப் பசேலென்ற செடிகளும் தெரியும் இடத்தில் அதைப் பார்த்தவாறு இருக்கைகளை அமைக்காமல், அங்கெ கழிப்பறையும் கடைகளையும் கட்டி விட்டுள்ளார்கள். சோதனை முடிந்து உள்ளே போனல் அங்கேயும் அப்படித்தான். விமான ஓடுகளத்தை பார்த்து இருக்கைகளை அமைக்காமல் உள்ளடங்கி, இருட்டான இடத்தில் அமைத்துள்ளார்கள்.

இயற்கை வெளிச்சத்தை சற்றும் பயன்படுத்தாமல், வீணடித்துள்ளார்கள்.

இவை அனைத்தையும் காட்டிலும் மிக முக்கியமான ஒன்று. நான் கொழும்பு சென்ற விமானத்தில் 95 சதவிகிதம் சென்னை, திருச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொச்சின் பயனித்தவர்களே. கொழும்பு ஒரு மிகப்பெரிய குழிசியாக (Hub) மாறி வருகிறது.

ஹைதரபாத் மற்றும் பெங்கலூரு விமானநிலையங்களும் பலவிதமான நவீன வசதிகளுடன் வரும். அப்போது சென்னை நிலையம் இன்னும் பரிதாபகரமாகத்தான் இருக்கும்.

No comments: