Sunday, June 18, 2006

நினைவெல்லாம் நான்....

நிலவொளி மொட்டை மாடியை நனைக்க, இதமான காற்று மெல்ல மெல்ல உடலை மஸாஜ் செய்து கொண்டிருந்தது. காற்றில் அசைந்த இலைகள் கச்சேரி ஆரம்பிக்கும் முன் சுருதி சேர்ப்பது போல சலசலத்தது. “வ்வ்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்…….”வாசலில் சென்ற மோட்டர் பைக் சுருதி பேதமாய் இருந்தாலும். அவனது மோன நிலை சற்றும் பாதிக்கப் படவில்லை.

அவன் இப்போது 30 வயது குறைந்திருந்தான். மனது இளமையாயிருந்தது. இது எத்தனை முறை அசை போட்டாலும் அலுக்கவே அலுக்காத ஒன்று. நன்கு மேய்ந்த பின்னர், மர நிழலில் சாவகாசமாக படுத்துக் கொண்டு அசை போடும் மாடு போல.

தாமரை இலையில் விழுந்த தண்ணீர் முத்துக்கள் சிறு துளிகளாகி, பின்னர் வழுக்கி ஒடி, இன்னொரு துளியுடன் சேர்ந்து சற்று பெரியதாகி மீண்டும் இன்னொன்றுடன் சேர்ந்து இன்னும் பெரியதாகி கடைசியில் இலையின் நடுவில் பெரியதொரு முத்தாய் இருக்குமே அது போல, நாட்கள் வாரமாய், மாதமாய் உருண்டோடி 30 வருடங்களாகி விட்டன. அந்த நாள்தான் அவனுக்கு வங்கியில் சேர அழைப்பு வந்த நாள். அவன் வாழ்க்கையில் நேர்ந்த மிகப் பெரிய திருப்பு முனை.

தபால்காரரிடமிருந்த பெற்ற கவரை பிரிக்கு முன்பே அவனுக்கு தெரிந்துவிட்டது . ஒரே குதுகலத்துடன் பிரித்து படித்தவுடன் “அம்மா, எனக்கு ஆர்டர் வந்துடுத்து” என்று சொல்லிக் கொண்டே சமையலறை பக்கம் ஒடினது, அம்மா “என்னடா, என்னடா” என்று ஒரு கை தண்ணீரை எடுத்து எரியும் விறகின் தலையிலே தெளித்து அடுப்பை தணித்து வெளியே வந்து “என்னாடா சொல்றே, எங்கேயிருந்து ஆர்டர் வந்திருக்கு?” என்று கேட்டது, “அம்மா, எனக்கு பேங்க் அலாட் ஆகி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்திருக்கும்மா. 25தேதிக்குள்ள ஜாய்ன் பண்ணனும். போஸ்டிங் திருநெல்வேலிம்மா” என்று சொன்னதும், “எல்லாம் ஸ்வாமி கிருபை” என்று அம்மா சந்தொஷப்பட்டதும் , சற்று நேரம் கழித்து “ஏண்டா, நம்மூர்லேயே திருச்சிலே வேலை இல்லையாமா?” என்று சற்று அரை மனதாக, பிறந்ததிலிருந்து இது நாள் வரை பிரியாத மகனை பிரியப்போகும் ஏக்கம் கண்ணில் தெரிய கேட்டது எல்லாம் ஏதோ சினிமா பார்ப்பது போல மனதில் வந்தது.

“சரி, சரி, ஸ்வாமிகிட்டே ஆர்டரை வச்சு நமஸ்காரம் பண்ணு. அப்புறம் எடுத்துண்டு போய் அப்பாகிட்டே காமி..”

அப்பா ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர். வீடு ஸ்டேஷனுக்கு பக்கத்திலேயே. வாசலில் நின்று வேகமாகக் கத்தினால் அப்பாவிற்கு கேட்கும். ஆனால் அதற்கு அவசியமேயில்லை. “என்னடா, ஆர்டர் வந்துடுத்தா? போஸ்ட்மேன் சொன்னார். அதான் புக்கிங் கிளார்க்கை கொஞசம் பார்த்துக்க சொல்லிட்டு ஓடி வந்தேன்” என்றபடியே அப்பா நுழைந்தார். ஆர்டரை வாங்கி படித்துவிட்டு, “போன வாரம் அந்த குருவிக்காரி கை பார்த்து சொன்னது அப்படியே பலிச்சுடுத்துடா, அவளுக்கு தெய்வ வாக்கு…” என்றார். (இவர்கள் ரெகுலராக பயணம் செய்பவர்கள். பிளாட்பாரத்தில் ரயிலுக்காக உட்கார்ந்து கொண்டு இருக்கும் நேரத்தில், பிரயாணத்திற்கு வரும் மற்ற பயணிகளிடம் இது மாதிரி ஜோஸ்யம் பார்க்கிறது, கொய்யாப்பழம் விற்பது, தள்ளுபடி விலையில் வேட்டி, புடவை விற்கிறது எல்லாம் நடக்கும். அப்படியே இன்னும் கொஞ்சம் தள்ளு விலையிலோ அல்லது சும்மாவோ, ரயில்வே ஸ்டாஃப்க்கும் கிடைக்கும்.)

எனக்கு பிஸ்ஸி(பிஸிக்ஸ்) படிக்கனும்தான் ஆசை. ஆனா அப்பாதான் என்னை பி.காம் படித்தால் தான் பாங்க் வேலை கிடக்கும் என்று சொல்லி என்னை கல்லூரியில் சேர்த்தார். அப்போது எல்லாம் பாங்க் வேலைன்னா ரொம்ப பெருமை. அப்பாவிற்கு அவருடைய எண்ணம் ஈடேறியதில் மிகவும் சந்தோஷம்.

கல்லூரியை பற்றி எண்ணியதுமே என் மனம் சற்று நின்று, ரிவர்ஸ் கியர் போட்டு இன்னும் சிறிது காலம் பின்னோக்கி சென்றது.

என் கல்லூரி படிப்பிற்காகவே, அப்பா ஒரு குக்கிராம ஸ்டேஷனிலிருந்து, திருச்சி டவுன் ஸ்டேஷனுக்கு மாற்றல் வாங்கி கொண்டு வந்திருந்தார். திருச்சி ஒரு மிகப்பெரிய ஊராக காட்சியளித்தது எனக்கு. எங்கள் சொந்தக்காரர் ஒருவர், எல்லா கல்லூரிகளிலும் எனக்கு அப்ளிகேஷன் வாங்கி வந்து கொடுத்து கூடவே, “..நீ ஒன்னும் கவலைப்படாதே, நேஷனல் காலேஜில் நான் உனக்கு அட்மிஷன் வாங்கி கொடுத்துடறேன்..” என்று உறுதியளித்து அவ்வாறே வாங்கியும் கொடுத்தார்.

தினமும் ரயிலில் பயணம், காலையும் மாலையும். 9:23 க்கு லால்குடி- திருச்சி பாஸஞ்சர் டவுன் ஸ்டேஷனுக்கு வரும். 9:26க்கு கிளம்பும். வண்டியில் முழுக்க ரயில்வே ஆபீஸில் (திருச்சி ஜங்ஷன் டிவிஷனல் ஆபீஸ் ரொம்ப பெரியது) வேலை செய்பவர்களும், கல்லூரி மாணவ மாணவியரும் தான். டவுன் ஸ்டேஷனுக்கு முந்திய ஸ்டேஷன், ஸ்ரீரங்கம். இங்குதான் வண்டி நிரம்பும். மாணவியர் அனைவரும் டவுனில் இறங்கி விடுவார்கள். (சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரிக்கும், சாவித்திரி வித்யாசாலாவிற்கும், சில பேர் மட்டும் ஹோலி கிராஸ் கல்லூரிக்கும் நடந்து சென்று விடுவார்கள்). டவுனில் ஏறுபவர்கள் அனைவரும் ரயில்வே ஆபீஸ் அல்லது, ஜமால் முகம்மது கல்லூரி அல்லது தேசிய (நேஷனல்) கல்லூரிக்கு செல்பவர்கள் (எல்லாம் ஆண்கள் ம(ட்டு)டம்).

அதே கம்பார்ட்மெண்ட், அதே நண்பர்கள், அதே பெரிசுகள், அதே இருக்கை. கல்லூரிப் படிப்பை முடித்த நண்பர்கள் மாறலாம். மற்றவை மாறவே மாறாது. ரங்காவும், சக்தியும் என் சீனியர்ஸ். இருவரும் ஸ்ரீரங்கம். வண்டி டவுன் ஸ்டேஷனைத் தாண்டியதும், கதவோரம் வந்து விடுவார்கள். ஒரு சிகரெட, நான்கு உதடுகள். சிகரெட் வாயில் இல்லாத நேரத்தில், ஸ்ரீரங்கத்து தேவதைகளைப் பற்றி விமர்சனம் நடக்கும். இதில் கூட பயணித்த, மற்றும் உள்ளூர் தேவதைகளும், சில சமயங்களில் தேவாதி தேவர்களும்(தேவதைகளை பெற்றவர்கள்) இடம் பெறுவர்.

ஆனால் டவுனில் ஏறும் நாங்கள் அபாக்கியசாலிகள். நாங்கள் வண்டியில் ஏறும் போதும் அவர்கள் இறங்கும் போதும் கிடைக்கும் அச்சிறு கண நொடிகளே. இதில் எனக்கு இன்னும் கடினம். ஸ்டேஷன் மாஸ்டர் பையன் ஆனதால் அங்கு இருக்கும் எல்லாருக்கும் (அந்த ஸ்டேஷனில் வேலை பார்ப்பவர்கள், ரயில் கார்டு, டிரைவர், டி.டி.ஆர், ரயில்வே ஆபீசில் பணி புரிபவர், கடலை விற்பவர் அனைவருக்கும்) என்னைத் தெரியும் (யாரது! கோபாலன் பையனா? என்ன நேஷனலா? நன்னா படி.. என்ன!!!). கப்சிப் என்று பவ்யமாக வண்டி ஏறி சென்று திரும்ப வேண்டியதுதான். சில சமயங்களில் சில பெரிசுகள் கூப்பிட்டு தன் பக்கத்தில் வேற உட்கார்த்தி வைத்துக் கொண்டு விடும். மேலும் திருச்சி எனக்கு புதிது! இந்த தேவ தரிசனம் அதனினும் புதிது!!

இந்த மாதிரியான விஷயங்களில் பால பாடங்கள் முடிந்து சற்று தேறிய நிலையில் இருந்த போது, (இப்போது நான் செயிண்ட் ஜோசப் கல்லூரி. பெண்கள் கல்லூரி வழியாகவும் போகலாம், மலை வாசல் வழியாகவும் போகலாம் ), என் சகோதரி (பெரியம்மாவின் பெண்) வந்து எங்களுடனேயே தங்கி பெண்கள் கல்லூரிக்கு போக ஆரம்பித்தாள். அவ்வளவுதான் . நான் தினமும் நவரத்னங்களை தவிர்த்து , மலை வாசலில் இருக்கும் மாணிக்க வினாயகரைத் தரிசனம் செய்து கொண்டு கல்லூரி செல்லலானேன்.

என் மேல் விழுந்த ஒரு நீர்த்துளி சடாரென்று என் மன வண்டியை பிரேக் போட்டு நிறுத்தியது. ஒரு சிறு சிலிர்ப்புக்குப் பிறகு வண்டி பாஸ்ட் பார்வோர்ட்ல் போய் சென்ற வாரத்தில் நின்றது.

“அம்மா.. எனக்கு அட்மிஷன் கன்பர்ம் ஆயிடுத்தும்மா “ எனக் குரல் கேட்டு, அவள் குக்கிங் ரேஞ்சை ஆஃப் செய்து விட்டு, “என்னடா, அட்மிஷன் வந்துடுத்தா? “ என்றவாறு ஓடி வந்தாள்.

“ஆமாம்மா. US லே Purdue யுனிவர்சிட்டிலேருந்து ஆஃபர் வந்திருக்கும்மா. ஆகஸ்டுலே காலேஜ் ஆரம்பிச்சுடும்மா..”

“…… இத்தனை வருஷம் உங்கூடவே இருந்துட்டு இப்போ தனியா போகனும்.. ம்ம்ம்ம்ம்ம். ” என்று கூறி நமுட்டு சிரிப்புடன் “ ஏன் நீயும் வாயேன். நான் வீடு எடுத்துதான் தங்க போறேன். நீ வந்தா எனக்கும் சௌகரியமா இருக்கும்…” என்றவனிடம் “” போ..போ.. வேற வேலையில்லை. கொஞ்ச நாள் தனியா இருந்து அவஸ்தைப்படு. சும்மா அம்மா கோண்டா இருக்காதே..” என்று சிணுங்கினாள்.

“ஆனா பாருடா, அந்த கடலங்குடி சரஸ்வதி ஜோஸ்யம் சொன்னா. நீ வந்து நுண்துறை சம்பத்தப்பட்ட படிப்பு தான் படிப்பேன்னா. அதே மாதிரி ஆயிடுத்து பாரேன். சரி, இதை அப்பாக்கு போன்லெ சொல்லிட்டு, இ-மெயிலில் ஆபீஸ் அட்ரசுக்கு பார்வோர்டு பண்ணிடு..”

இது என் மகனுக்கும், மனைவிக்கும் இடையே நடந்த உரையாடல்.

இந்த உரையாடலைக் கேட்டுக் கோண்டே உள்ளே வந்த நான், விவரங்கள் அறிந்த பிறகு, “என்னவோ போ.. நீ பாட்டுக்கு, இதைப் படிக்கிறேன், அதைப் படிக்கிறேன்னு சொல்றே. எனக்கு ஒன்னும் புரியலே. பெருமாள் கோயில் மாடு மாதிரி தலையாட்டிண்டு இருக்கேன்….”என்று நகர்ந்தேன்.

என்னை யாரோ உலுக்குவது போல் இருந்து திடுக்கிட்டு விழித்துப் பார்த்தபோது, அதற்கு காரணமான என் மனைவி அருகிலிருந்தாள்.

“…என்ன மணி 10:30 ஆகிறது. சாப்பிட வரலையா? ஏன் அதுக்குள்ளே தூக்கம்?..”

“இல்ல! இப்படி எதையோ நினைச்சு யோசனை பண்ணிண்டு இருந்தேனா.. அப்படியே பழசு எல்லாம் நினைவுக்கு வந்தது..” என்றேன்.

“ஒஹோஹோ! என்ன ஆட்டோகிராபோ? “ என்றாள் நமுட்டு சிரிப்புடன்.

“இல்லே ! இல்லே!! இது தவமாய் தவமிருந்து … “ என்று கூறி எழுந்தேன்.

---------------------------------------------------------------

பின் குறிப்பு : இந்த கதையின் தொடர்ச்சியை என் மகன் இன்னும் 30 வருடம் கழித்து நேனோ குக்கர், மைண்ட் ரீடர் என்றும், தன் பள்ளி, கல்லூரி அனுபவங்களையும்

“அம்மா.. எனக்கு அட்மிஷன் கன்பர்ம் ஆயிடுத்தும்மா “ எனக் குரல் கேட்டு, அவள் குக்கிங் ரேஞ்சை ஆஃப் செய்து விட்டு, “என்னடா, அட்மிஷன் வந்துடுத்தா? “ என்றவாறு ஓடி வந்தாள் ..”

என்கிறதுலேயிருந்து ஆரம்பித்து எழுதுவான்……


எனக்கு வளர்சிதை மாற்றம் ஏற்பட்டதோ இல்லையோ, எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் வளர்ந்து, சிதைந்து (மாறிப் ) போய் தான் இருக்கிறேன். எனக்கு வேண்டியதை என் அப்பா தீர்மானித்தார். தனக்கு வேண்டியதை என் மகன் தீர்மானிக்கிறான். என் வளர்ச்சியில் என் பங்கு என்ன?


தேன்கூடு + தமிழோவியம் (ஜூன் 2006 - வளர் சிதை மாற்றம்)

Saturday, June 10, 2006

No taxes will be levied in the Jagson Airlines tickets.

ஜாக்சன் விமான சேவையில், டிக்கெட்டில் வரி எதுவும் சேக்க மாட்டாங்களாம்.

ஏன்னா, கட்டபொம்மன்தான் ஏற்கனவே மிரட்டி வெச்சிருக்காரே !!!!

:-) :-)

Friday, June 09, 2006

குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டு...

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் என்றாலே நாடி. நரம்பு எல்லாம் சற்று முறுக்கேறிக் கொள்கிறது. நாம் உலக சந்தையைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதன் மூலமாக அரசு தன் வருவாயை எவ்வளவு பெருக்கிக் கொள்வதிலும், அரசியல் கட்சிகள் தனிப்பட்ட ஆதாயம் தேடுவதிலும் எவ்வளவு முனைப்பாக உள்ளன.

திரு ஜெயசங்கர் மிக நல்ல பதிவை எழுதியிருக்கிறார். http://wethepeopleindia.blogspot.com/2006/06/blog-post_03.html

வரி விகிதங்கள் அப்படியே இருக்கின்றன. உலக சந்தையில் விலை ஏற ஏற, அரசுக்கு வரும் Customs and Excise வரிகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. மேலும், ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக விதிக்கப்பட்ட Cess, Surcharge and Special duty விலக்கிக் கொள்ளப் படவேயில்லை. (யஷ்வந்த் சின்ஹா போட்ட Special duty அதிகரிப்பட்டதே தவிர குறைக்கவோ எடுக்கப்படவோ இல்லை).

மாநில அரசுகள் விற்பனை வரியையும் குறைத்துக் கொள்ளேவேயில்லை. எதிர் கட்சி ஆளும் மாநிலமாயிருந்தால் மத்திய அரசை குறை கூறி ஒரு அறிவிப்பு இடுத்து சும்மா இருந்து விடு. ஆளூம் கட்சி ஆளும் மாநிலமாயிருந்தால் 'கப்சிப்' என்று இருந்து விடும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகளே (57% மேலாக) இந்த வி(நி)லைக்குக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. உலக அளவில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முதல் 5 பட்டியலில் வரும்.

ஏன் அரசுகள் வரி குறைப்பு செய்ய முயலவில்லை? இது மிகக் குறைந்த செலவில் அரசு பெரும் வருமானம். இதைக் குறைத்தால் வேறு விதமாக வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அது மிகவும் கடினம் மற்றும் the cost of collecting would be high.

ஆனால் இதை வைத்து ஆதாயம் தேடும் அரசியல் நிலைகளைப் பாருங்கள்:

1) West Bengal & Kerala மற்றும் பிற மாநில தேர்தலுக்காக இது வரை இந்த விலை ஏற்றத்தை ஒத்திப் போட்டார்கள் என்றும் இனியும் தள்ளிப் போட முடியாது என்றும் செய்திகள். இது நியாயமான பொருளாதார நடவடிக்கை என்றால் ஏன் முன்பே செய்ய வில்லை? ஓட்டு போய் விடும் என்றுதானே?

2) கம்யுனிஸ கட்சிகள், போராட்டம் என்று பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய, அவர்கள் இதில் முழு மூச்சோடு செயல் பட்டார்களா? கம்யுனிஸ கட்சிகள் இந்த ஏற்றத்தை நிஜமாகவே எதிர்கிறார்கள் என்றால், ஏன் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்ளக் கூடாது?

3) காங்கிரஸ் கட்சிக்கு இந்த விலை ஏற்றத்ததில் உடன்பாடு இல்லையாம். இது குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் இல்லையா? இதில் ஆதாயம் தேடுவது யார்? சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும் கருத்து வேறுபாடு அதிகரித்துக்கொண்டே போகிறது என்றும் அதுவே இந்த எதிர்ப்பு என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

4) செல்வி.ஜெயலலிதா ஆட்சியின் போது, திரு.கருணாநிதி, மாநில அரசு விற்பனை வரியை குறைத்து மக்களுக்கு ஏற்பட்ட சுமையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார். இப்போது திரு.கருணாநிதி அதை ஏன் இன்னமும் செய்யவில்லை? தனக்கு ஒரு நீதி, மற்றவருக்கு வேறொன்றோ?

விலை ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம். Demand and Supply. நம் தேவைக்கு குறந்த அளவே நாம் கச்சா எண்ணையை உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்கிறோம். ஏன்? நம்மிடம் உள்ள சுத்திகரிப்பு திறனும், அளவும் அவ்வளவுதான். கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு சுத்திகரிப்பு திறன் அதிகரிக்கப்பட்டது? இதை பெருக்க எடுத்துகொண்ட முயற்சியென்ன?

சௌதி அரசர் இந்திய விஜயத்தின் போது இதையே சொன்னார். "நாங்கள் அதிக உற்பத்தி மற்றும் / ஏற்றுமதி செய்ய தயாராய் இருக்கிறோம். ஆனால் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளின் சுத்திகரிப்பு திறன் உயர்த்தப் படவில்லை"

அரசும் அரசியல் கட்சிகளும் சிறிதும் தொலை நோக்கோடு செயல் படவில்லை என்றே தெளிவாகின்றது.

Thursday, June 08, 2006

உனக்காக எல்லாம் உனக்காக.....

அன்று SMS ல் எனக்கு வந்த செய்தி. "...Also nescafe natarajan passed away today evening.......". இதுவே முழு செய்தி அல்ல. மற்ற செய்திகளின் இடையே திணிக்கப்பட்ட ஒரு செய்தி. இரண்டு ரொட்டித் துண்டுகளிடையே சிறை வைக்கப்பட்ட cheese மாதிரி.

என் மனது சற்று உதறியது. இறந்து போன திரு. நடராஜன் எனக்கு ஒன்று விட்ட (ஏன் இரண்டு, மூன்று கூட) மாமா. என் தாய் வழிப் கொள்ளுப் பாட்டியும் அவர் தாய் வழிப் பாட்டியும் cousins. எனவே உறவு முறையில் எட்ட இருந்தாலும், பழகு முறையில் என் தாய்க்கும், அவர் குடும்பத்திற்கும் நெருக்கம். அந்த முறையில் அவரும் எனக்கு பழக்கம். அவருடைய மகன் என் பெண்ணிற்கு பரத நாட்டிய குரு. உதறுதலுக்கு இந்த பந்தம் ஒரு காரணம்.

எனக்கு உடனே ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முந்தியது அது அவரின் கல்யாணம் நடந்த நாள். கும்பகோணம் ராமன் & ராமன் சத்திரம் (வீட்டை சத்திரமாக ஆக்கியிருந்தார்கள்). சற்று பெரிய முற்றம். அதை ஒட்டிய தாழ்வாரத்தில் கல்யாணத்து அன்று மாலை நடக்கும் நலங்கு நடந்து கொண்டிருந்தது. எல்லோரும் என் மாமியை பாட சொன்னார்கள். அதன் பின் மாப்பிள்ளை வீட்டு முறை. நீ பாடு, நான் பாடு என்று ஒரே ஏலம். திடீரென்று என் மாமா (மாப்பிள்ளை) பாட ஆரம்பித்தார். "உனக்காக எல்லாம் உனக்காக, இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக.." என்ற சந்திரபாபு பாட்டை தன் கணீரென்ற குரலில் பாடினார். (இதுதான் காரணமோ என்னவோ தெரியவில்லை, இந்த பாட்டு சந்திரபாபுவின் பாட்டுக்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது.) .

இந்த ஒரு சம்பவம் என் மனத்தில் ஒரு பசு மரத்தாணி போல பதிந்து இருந்தது. எனக்கு இந்த கல்யாணத்தில் வேறு ஒரு நிகழ்ச்சியும், ஏன் நான் என்ன உடை அணிந்திருந்தேன், யார் கூட சென்றேன் (எனக்கு வயது அப்பொழுது 8 - 10 க்குள் இருக்க்கலாம்) என்று எதுவும் சுத்தமாக நினைவில் இல்லை.

எனக்கு இந்த SMS ல் சுறீரென்று உறைத்த மற்ற ஒன்று. சம்பிரதாயமாக இரங்கல் செய்திகள் தெரிவிக்கும்போது வேறு எந்த செய்திகளையும் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் அந்த செய்தி "...Also nescafe natarajan passed away today evening.......". என்று வந்தது மனதை சற்று குறுகுறுக்கச் செய்தது. இது அனுப்பியவர்களின் குற்றம் அல்ல. காலத்தின் வேகம், தொழில் நுட்பத்தின் கட்டாயம், இன்றைய வாழ்க்கையின் எதார்த்தம்.

எது எப்படி இருந்தாலும் என் மாமாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தேன்

Friday, June 02, 2006

ஆதாயம் தரும் பதவி (Office of Profit)யும் CPMன் நிலையும்.

Parliament (Prevention of Disqualification) Amendment Bill, 2006 ல் குறிப்பிடப்பட்ட 56 வாரியங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

இதில் 17 வாரியங்கள் West Bengal ல் உள்ளவை. There is no wonder about the CPM's vested interest in getting this bill passed. இரு வாரங்களுக்கு முன்னர் தான் CPM தற்போது எடுத்து வரும் நிலப்பாடுகளின் தரம் குறித்து மெச்சி எழுதினேன் ( http://balablooms.blogspot.com/2006/05/cpm.html) . என்னை 'அடங்குடா, மவனே!!' என்று கூறி தங்களுக்கு எது நல்லதோ, எந்த விஷயம் தங்களை முன்னிலைப்படுத்துமோ அதில் மட்டும்தான் நாங்கள் குரல் கொடுப்போம் என்பதை உறுதி செய்துள்ளார்கள்.

இந்த விஷயத்தில் CPM இன் தோல் உரித்துக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் உறுப்பினர்கள் உதித்துள்ள சில பொன்மொழிகளை படியுங்கள்:

“If this state of affairs is allowed to continue, then there are bound to be litigations on a large scale as well as the likely vacation of seats in both Houses of Parliament, which will necessitate the holding of by-elections to fill up these vacancies."

“This would result in a lot of wasteful expenditure and would enforce an unnecessary financial burden upon the nation,” Mr Bharadwaj added. - Decaan Herald - May 17th.

ராய் பரேலியில் நடந்த செலவு தேசிய முன்னேற்றத்திற்காக செலவிடப்பட்டது போலும். இந்த BILL சட்டமாக அமலாக்கப் படாவிட்டால், UPA கவிழ்ந்தாலும் கவிழும். இப்போது தெரிகிறதா, மதிமுகவின் 4 MPக்களின் மகிமை.

“This is the prerogative of Parliament and the state legislatures, they have the powers (to do so),” Karat said.

இது ஜனாதிபதியின் "எல்லா மாநிலங்களுக்கும் ஒப்புதலான ஒரு வறைமுறை" குறித்த ஆலோசனைக்கு பிரகாஷ் கரத்தின் பதில். அகில இந்திய ஹஜ் கமிட்டி மற்றும் மேற்கு வங்காள ஹஜ் கமிட்டி மற்றுமே இடம் பெற்றுள்ளன இந்த பட்டயலில். மற்ற மாநில ஹஜ் கமிட்டிகள் என்னவாயிற்று? அதன் பொருப்பாளர்கள் இப்பொழுது MP ஆக இல்லை. அவர்கள் MP க்களானால் அப்பொழுது தனி சட்ட திருத்தம் கொண்டு வரலாம். ஏனென்றால் பாராளுமன்றத்திற்கு வேர வேலை இல்லை பாருங்கள்.

இப்பொழுது பிரகாஷ் கரத் தேர்தல் ஆணயம் இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது என்கிறார். "Questions for Money" scamல் பார்லிமெண்ட் செயல்பட்ட சுறுசுறுப்பின் காரணம் அதில் சம்பத்தப்பட்ட பெரும்பான்மையானோர் BJP என்பதாலும், CPM, CPI சேர்ந்தவர்கள் எவரும் இல்லை என்பதினால்தானோ?

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் என்பது போல, இது காங்கிரஸ் தனக்குத் தானே வைத்துக் கொண்ட ஆப்பு.

இது சம்பந்தமான "idly vadai" பதிவும் அருமை . http://idlyvadai.blogspot.com/2006/06/111-143.html

Exempted institutions from OoP definition:

1 The TTD Board AP
2 The Bihar State Religious Trust Board BIHAR
3 The Board of Control-A.N Sinha Institute of Social Studies, Patna BIHAR
4 National Advisory Council Central
5 The Society for Self-Employment for Urban Youth Central
6 The Agricultural and Processed Food Products Export Development Authority Central
7 The National Agricultural Co-Operative Marketing Federation of India Ltd Central
8 The Indian Farmers Fertilizers Co-operative Ltd Central
9 The Krishak Bharti Co-Operative Limited Central
10 The National Co-Operative Consumers Federation of India Ltd Central
11 The Aurovile Foundation Central
12 The National Commission of Enterprises in the Unorganised Sector Central
13 The Planning Board (Asiatic Society Central
14 Delhi Rural Development Board Central
15 The Maulana Azad Education Foundation Central
16 The Dr. Amedkar Foundation Central
17 The Research and Information System for the Non-Aligned and other Developing Countries Central
18 The Indira Gandhi National Centre for Arts Central
19 The Indian Institute of Psychometry Central
20 The Indian Council of Cultural Relations Central
21 All India Council for Sports Central
22 The Central Wakf Council Central
23 The Nehru Memorial Museum and Library Central
24 The Jalianwala Bagh Memorial Trust Central
25 The Haj Committee of India Central
26 The Mallickghat Phoolbazar Parichalan Committee Central
27 The Dalit Sena Delhi
28 The Social Justice Trust Delhi
29 The Bahujan Prerna Charitable Trust, Delhi Delhi
30 The Tripura Khadi and Village Industries Board Tripura
31 The UP Development Council UP
32 The Uttar Pradesh Co-operative Bank UP
33 The Uttar Pradesh Pradesh Provincial Co-operative Federation Ltd UP
34 The Uttar Pradesh Co-operative Federation Ltd UP
35 The National Co-Operative Union of India UP
36 UP Krishi and Gram Vikas Bank UP
37 The Uttar Pradesh Co-operative Bank Limited UP
38 The Bahujan Foundation (Charitable Trust, LUCKNOW UP
39 The Irrigation and Flood Control Commission UP
40 The Asansol Durgapur Development Authority WB
41 The Indian Statistical Institute , Kolkotta WB
42 The West Bengal Handicrafts Development Corporation Ltd WB
43 The WB Small Industries Development Corporation Ltd WB
44 The West Bengal Industries Development Corporation Ltd WB
45 The Shantiniketan Sriniketan Development Authority WB
46 Haldia Development Authority WB
47 The WB Minorities Development Finance Corporation WB
48 The Hoogly River Bridge Commissioners WB
49 The West Bengal Fisheries Development Corporation Ltd WB
50 West Bengal State Haj Committee WB
51 The West Bengal Pharmaceutical and Phytochemical Development Corporation Ltd WB
52 The West Bengal Powerloom and Handloom Development Corporation Ltd WB
53 The West Bengal Khadi and Village Industry Society WB
54 Howrah Improvement Trust WB
55 The WB Fisheries Corporation WB
56 The Board of Wakf, WB
WB