Friday, June 09, 2006

குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டு...

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் என்றாலே நாடி. நரம்பு எல்லாம் சற்று முறுக்கேறிக் கொள்கிறது. நாம் உலக சந்தையைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதன் மூலமாக அரசு தன் வருவாயை எவ்வளவு பெருக்கிக் கொள்வதிலும், அரசியல் கட்சிகள் தனிப்பட்ட ஆதாயம் தேடுவதிலும் எவ்வளவு முனைப்பாக உள்ளன.

திரு ஜெயசங்கர் மிக நல்ல பதிவை எழுதியிருக்கிறார். http://wethepeopleindia.blogspot.com/2006/06/blog-post_03.html

வரி விகிதங்கள் அப்படியே இருக்கின்றன. உலக சந்தையில் விலை ஏற ஏற, அரசுக்கு வரும் Customs and Excise வரிகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. மேலும், ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக விதிக்கப்பட்ட Cess, Surcharge and Special duty விலக்கிக் கொள்ளப் படவேயில்லை. (யஷ்வந்த் சின்ஹா போட்ட Special duty அதிகரிப்பட்டதே தவிர குறைக்கவோ எடுக்கப்படவோ இல்லை).

மாநில அரசுகள் விற்பனை வரியையும் குறைத்துக் கொள்ளேவேயில்லை. எதிர் கட்சி ஆளும் மாநிலமாயிருந்தால் மத்திய அரசை குறை கூறி ஒரு அறிவிப்பு இடுத்து சும்மா இருந்து விடு. ஆளூம் கட்சி ஆளும் மாநிலமாயிருந்தால் 'கப்சிப்' என்று இருந்து விடும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகளே (57% மேலாக) இந்த வி(நி)லைக்குக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. உலக அளவில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முதல் 5 பட்டியலில் வரும்.

ஏன் அரசுகள் வரி குறைப்பு செய்ய முயலவில்லை? இது மிகக் குறைந்த செலவில் அரசு பெரும் வருமானம். இதைக் குறைத்தால் வேறு விதமாக வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அது மிகவும் கடினம் மற்றும் the cost of collecting would be high.

ஆனால் இதை வைத்து ஆதாயம் தேடும் அரசியல் நிலைகளைப் பாருங்கள்:

1) West Bengal & Kerala மற்றும் பிற மாநில தேர்தலுக்காக இது வரை இந்த விலை ஏற்றத்தை ஒத்திப் போட்டார்கள் என்றும் இனியும் தள்ளிப் போட முடியாது என்றும் செய்திகள். இது நியாயமான பொருளாதார நடவடிக்கை என்றால் ஏன் முன்பே செய்ய வில்லை? ஓட்டு போய் விடும் என்றுதானே?

2) கம்யுனிஸ கட்சிகள், போராட்டம் என்று பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய, அவர்கள் இதில் முழு மூச்சோடு செயல் பட்டார்களா? கம்யுனிஸ கட்சிகள் இந்த ஏற்றத்தை நிஜமாகவே எதிர்கிறார்கள் என்றால், ஏன் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்ளக் கூடாது?

3) காங்கிரஸ் கட்சிக்கு இந்த விலை ஏற்றத்ததில் உடன்பாடு இல்லையாம். இது குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் இல்லையா? இதில் ஆதாயம் தேடுவது யார்? சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும் கருத்து வேறுபாடு அதிகரித்துக்கொண்டே போகிறது என்றும் அதுவே இந்த எதிர்ப்பு என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

4) செல்வி.ஜெயலலிதா ஆட்சியின் போது, திரு.கருணாநிதி, மாநில அரசு விற்பனை வரியை குறைத்து மக்களுக்கு ஏற்பட்ட சுமையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார். இப்போது திரு.கருணாநிதி அதை ஏன் இன்னமும் செய்யவில்லை? தனக்கு ஒரு நீதி, மற்றவருக்கு வேறொன்றோ?

விலை ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம். Demand and Supply. நம் தேவைக்கு குறந்த அளவே நாம் கச்சா எண்ணையை உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்கிறோம். ஏன்? நம்மிடம் உள்ள சுத்திகரிப்பு திறனும், அளவும் அவ்வளவுதான். கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு சுத்திகரிப்பு திறன் அதிகரிக்கப்பட்டது? இதை பெருக்க எடுத்துகொண்ட முயற்சியென்ன?

சௌதி அரசர் இந்திய விஜயத்தின் போது இதையே சொன்னார். "நாங்கள் அதிக உற்பத்தி மற்றும் / ஏற்றுமதி செய்ய தயாராய் இருக்கிறோம். ஆனால் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளின் சுத்திகரிப்பு திறன் உயர்த்தப் படவில்லை"

அரசும் அரசியல் கட்சிகளும் சிறிதும் தொலை நோக்கோடு செயல் படவில்லை என்றே தெளிவாகின்றது.

1 comment:

We The People said...

பாலா,

பாராட்டுக்கு நன்றி. இந்த பதிவை நான் பார்க்காதால் தான் நன்றி தெரிவிக்க முடியாமல் போனது. மக்களுக்கு இந்த ஏமாற்று வேலை சென்றடைய வேண்டும் என்பதில் முடிவாக உள்ளேன் பார்ப்போம் எவ்வளவு நாள் ஆகிறது என்று. நீங்களும் இதற்கு ஒரு தூண்ணாக உள்ளதில் மிக்க மகிழ்ச்சி.

நட்புடன்,

ஜெயசங்கர்