Thursday, January 10, 2008

வந்தாச்சு, வந்தாச்சு .. டாடாவின் 'நேனொ' பொது மனிதனின் ஒரு லட்சம் ரூபாய் கார்

தில்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்பிஷனில், இன்று திரு ரத்தன் டாடா, டாடா நிறுவனத்தினரின் பொது மக்களின் காராகிய ஒரு லட்சம் ரூபாய் காரை அறிமுகப்படுத்தினார். இதன் பெயர் 'நேனோ'. மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட, இந்தக் கார் 4  அல்லது 5 பேரை ஏற்றிச்செல்ல முடியும்.

விமர்சகர்களுடைய எதிர்மறையான கருத்துக்களையும், தொழில் முறை போட்டியாளர்களின் எதிர் வாதங்களையும் (குறிப்பாக சுசுகியின்) முறியடித்து இந்த அறிமுகம் நடந்தது.  அந்த மேடையிலேயே இந்தக் காரின் விலை ரூபாய் ஒரு லட்சம் என்றும் அறிவித்தார்.

முற்றிலும் இந்தியத் தயாரிப்பான இந்தக் கார், மேலை, மற்றும் ஜப்பானிய கார் உற்பத்தியாளர்களை இந்தியாவின் பக்கம் திருப்பியிருக்கிறது.

டாடா நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்.

1 comment:

Anonymous said...

டாடா நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்.

happy to visit you site to know abt many places.
thanks,
jayaraj
jayaraj@sffeco.com.sa