Tuesday, April 04, 2006

ஏன் இந்த அவசரம்?

தேர்தல் ஆணையம் ராய் பரேலி தொகுதியில் மே 8 தேதியில் இடைத்தேர்தலை நடத்த ஆணை பிறப்பித்து உள்ளது. இது சாதரணமான ஒரு அறிவிப்பு போல தோண்றினாலும், நிகழ்ச்சி தொடர்வுகள் சற்று வித்தியாசமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

  1. 14ம் மக்களவையின் ஏழாவது அமர்வு பிப்ரவரி முதல் மே வரை.
  2. இந்த தொடர் கடந்த 22ம் தேதி மார்ச் மாதம், 10ம் தேதி மே மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
  3. திருமதி. சோனியா காந்தி, தனது மக்களவை உறுப்பினர் பதவியை 23ம் தேதி ராஜினாமா செய்தார் (அதாவது, கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப் பட்ட பின்னர்.)
  4. இப்பொழுது தேர்தல் ஆணையம் (ராஜினாமா செய்த 13 நாட்களுக்குள்) இடைத்தேர்தலை அறிவித்து உள்ளது. தேர்தல் தேதி மே 8. முடிவு அறிவுக்கும் நாள் மே 11.
  5. மீண்டும் மக்களவை கூடும் தேதி மே 10.
  6. திருமதி. சோனியா காந்தி மீண்டும் தேர்ந்து எடுக்கப் படுவது திண்ணம்.
  7. மே 11 அல்லது மே 12ல் அவர் மீண்டும் மக்களவை உறுப்பினர் ஆவார்.
  8. ஆக திருமதி. சோனியா காந்தி ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே மக்களவை செல்ல மாட்டார்.

இது மாதிரி, இவ்வளவு குறுகிய நாட்களில் முன்னர் எப்பொழுதாவதாவது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தப் பட்டுள்ளதா? இப்பொழுது ஏன் இந்த அவசரம்?

ஏற்கனவே தேர்தல் தலைமை அதிகாரி திரு. நவீன் சாவ்லா, காங்கிரசிற்கு வேண்டப்பட்டவர் என்று ஒரு குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது. இந்தச் செயல் அதை நிரூபணம் செய்யாதா?

திருமதி. சோனியா காந்தி இன்னும் ராஜிவ் காந்தி பவுண்டேஷன் தலைமை பதவியை ராஜினாமா செய்ய வில்லை குறிப்பிடத் தக்கது.......

No comments: