Thursday, March 23, 2006

அங்கீகரிக்கப் பட்ட அத்து மீறல்கள் # 2

திருமதி சோனியா காந்தி தன் பாராளுமன்ற தொகுதியையும், தேசிய ஆலோசனைக் குழு தலைமைப் பொறுப்பையும் ராஜினாமா செய்தது ஏதோ ஒரு மாபெரும் தியாகம் செய்தது போல் விவாதிக்கப் பட்டு வருவது, இன்றைய தினத்தின் மாபெரும் கேலிக்கூத்து ஆகும்.

திருமதி ஜெயா பச்சனின் பதவி பறிக்கப்பட்ட பொழுது, சப்தம் போடாமல் இருந்த காங்கிரஸ், இன்று அந்த நிலமை தன் தலைவிக்கு வரும் பொழுது, சட்டத்தை திருத்த முயற்சி மேற்கொண்டது. தனி நபருக்கு சாதகமாய் சட்டத்தைத் திருத்த முயற்சி மேற்கொண்ட செயலை எதிர்க் கட்சிகள் ஆட்சேபிக்க எத்தனிக்கும் சமயம், தன் பதவிகளை ராஜினாமா செய்து, தியாகம் செய்தது போல் ஒரு மாயையை திருமதி. சோனியா ஏற்படுத்தியுள்ளார்.

இவர் மேலும், தான் மீண்டும் ராய் பரேலி தொகுதியில் போட்டியிடப் போவதாய் அறிவித்து உள்ளார். காங்கிரஸ் செய்த தவற்றின் காரணமாய் இந்த ராஜினாமா செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்த நிகழ்வு இல்லை. மீண்டும் ஒரு முறை தேர்தல், மக்கள் வரிப் பணத்தில் ஏன் நடத்த வேண்டும்? இந்த தேர்தலின் முழு செலவையும் ஏன் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளக் கூடாது? இவ்வகையான தேர்தல் மாற்றங்களை ஏன் தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கக் கூடாது?

நாம், சோம்னாத் சாட்டர்ஜி மற்றும் பிற உறுப்பினர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments: